horse

horse

Monday, February 27, 2012

தூங்கும் போது கொர்… கொர்… ஆ ! உடனே கவனிங்க !!

Posted on Feb 27,2012,By Muthukumar
உடல் பருமன் காரணமாக தற்போது குறட்டை விடும் பெண்களின் எண்ணிக்கை அதகரித்து வருவது அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குறட்டையால் தூக்கத்தை தொலைப்பதோடு பல்வேறு நோய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இரவு நேரங்களில் படுக்கையறையில் கேட்கும் கொர் கொர் ஓசை பெரும்பாலான மக்களை அச்சுறுத்தி வருகிறது. குறட்டை ஒலி இரவு நேரத்தில் படுக்கையறையின் நான்கு சுவருக்குள்ளே அடங்கிப்போவதால், விடிந்ததும் அதைப்பற்றி பலரும் நினைத்துப்பார்ப்பதில்லை. ஆனால், அலட்சியப்படுத்தப்படும் இந்த குறட்டைக்கு சரியான சிகிச்சை பெறா விட்டால் அது ஆபத்தை உருவாக்கிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தற்போதைய ஆய்வு விவரங்கள்படி குறட்டை விடும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டி ருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். குண்டான பெண்களில் ஏராள மானவர்கள் குறட்டையால் தூக்கத்தை தொலைத்து, நோய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இளம் தலைமுறையினர்
இன்றைக்கு சிறுவர் சிறுமியர்கள் பலரும் மைதானங்களுக்கு சென்று விளையாடுவ தில்லை. பள்ளி சென்று வந்த உடன் வீட்டிலே அடைந்து கிடப்பது. ஒரே இடத்தில் அமர்ந்து டி.வி. பார்ப்பது, கம்ப்யூட்டரில் விளையாடுவது- வறுத்த, பொரித்த உணவுகளை உண்பது போன்றவைகளால் இளைய தலைமுறையினரும் உடல் பருமனாகி வருகின்றனர். எதிர்காலத்தில் அவர்களும் குறட்டையால் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது.
உயிருக்கு ஆபத்து
ஆரோக்கியமான மனிதர் ஒருவர் 8 மணி நேரம் தூங்குகிறார் என்றால், அவருக்கு பத்து வினாடிகள் வரை மூச்சு விடுவதில் லேசான தடை ஏற்படும். அப்போது அவரது மூளைக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையும். அவர் ஆரோக்கியமான மனிதராக இருந்தால், உடனே உடலில் இருக்கும் இயற்கையான விழிப்புணர்வு மெக்கானிசம், அதை சரிக்கட்டும் விதத்தில் அவருக்கு விழிப்பை கொடுத்து, சுவாசத்தை சரிசெய்துவிடும். இது இயற்கையான நிகழ்வு. ஆனால் குறட்டை விடுபவர்களுக்கு இந்த இயற்கை விழிப்புணர்வு மெக்கானிசம் சரியாக செயல்படாது. அப்படியிருக்க, அவர்கள் குடித்துவிட்டு தூங்கினாலோ, அதிக அளவில் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி தூங்கினாலோ இயற்கை மெக்கானிசத்தின் விழிப்பு நிலை மிகவும் குறைந்துவிடும். அப்போது அவர்களுக்கு குறட்டையால் தூக்கத்தில் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால், விழிப்பு ஏற்படாமல் தூக்கத்திலே உயிர் பிரியும் சூழல் ஏற்படலாம்.
தூக்கம் பாதிப்பு
தூங்கும்போது சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம்தான் குறட்டை சத்தமாக வெளிவருகிறது. மூக்கின் பின்புறம் `அடினாய்ட்’ தசையும், தொண்டைக்குள் `டான்சிலும்` இருக்கிறது. பல்வேறு காரணங்களால் இவை பெரிதாகும் போது, நாம் சுவாசிக்கும் காற்று எளிதாக உள்ளே போய் வெளியே வர முடியாத நெருக்கடி ஏற்படும். அந்த நெருக்கடியால் அழுத்தம் கொடுத்து மூச்சு இழுக்கும்போது காற்று பக்கத்து தசைகளிலும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த அதிர்வே குறட்டை சத்தமாக வெளிவருகிறது.
குறட்டைவிடுபவர்கள் இரவில் தூங்கும்போது 30 முதல் 40 தடவை மூச்சுவிட திணறுவார்கள். அதனால் அவர்கள் தூக்கம் அவ்வப்போது தடைபட்டு அவர்கள் தூங்கும் நேரம் குறையும். மறுநாள் சோர்வுடன் இருப்பார்கள்.
இரவில் தூக்கம் இல்லாமல் பகலில் தூங்குவது, தலைவலியோடு விழிப்பது ஆகியவை களால் `ஸ்லீப் அப்னீயா சின்ட்ரோம்` என்ற பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு வந்துவிட்டால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும். அதனால் மூளை மட்டுமின்றி, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல் பாடுகளும் பாதிக்கும். ஞாபக மறதி, ரத்த அழுத்த நோய்கள், ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சினைகளும் தோன்றக்கூடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
உடல் பருமன்
சிலர் குறட்டையின் பாதிப்பிற்கு சிகிச்சை பெற முடியாத அளவிற்கு உடல் பருமன், வயது முதிர்வு, குள்ளமான கழுத்து, மூக்கு- வாய் பகுதியில் தசை வளர்ச்சி போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் மூச்சு திணறல் இல்லாமல் இரவில் தூங்குவதற்காக `சி.பி.ஏ.பி’ என்ற கருவி உள்ளது. இதனை பொருத்திக்கொண்டு தூங்கினால் மூச்சு திணறலோ, குறட்டை தொந்தரவோ ஏற்படாது. குறட்டைக்கு சிகிச்சை மட்டும் போதாது. அவர்கள் உடல் பருமனை கட்டுக்குள்கொண்டு வர வேண்டும். அதற்காக உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவைகளில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உறங்கும் முறை
குறட்டை பாதிப்பு உள்ளவர்கள் தலையணையை சற்று உயரமாக வைத்து அவர்கள் தூங்க வேண்டும். மல்லாந்து படுக்காமல் ஒருக்களித்து அவர்கள் தூங்கவேண்டும். நாம் மூக்கின் வழியாகத்தான் சுவாசித்து உயிர்வாழ்கிறோம். எனவே மூக்கில் ஏற்படும் நோய்களையும், குறட்டையையும் அலட்சியம் செய்யாமல் அவ்வப்போது அதற்குரிய சிகிச்சைகளை பெற்றால் மட்டுமே நோய் வரும் முன்பு உடலை பாதுகாக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

முத்தம் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள்

Posted On Feb 27,2012,By Muthukumar
காதலர்களோ, தம்பதியரோ முதலில் அவர்களின் அன்பை வெளிப்படுத்தும் அற்புத பாஷை முத்தம். முத்தத்தின் வெளிப்பாடு என்பது அன்பின் பரிமாற்றம் தான் என்றாலும், அதை கொடுக்கிறவர்களைப் பொறுத்தும், வாங்கிக் கொள்கிறவர்களைப் பொறுத்தும் மாறுபடுகிறது.
முத்தத்தில் வித்தியாசம்
ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. கணவன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்தில் பாசத்துடன், காமமும் சேர்ந்தே இருக்கும். ஆனால், காதலர்களுக்குள் இந்த முத்தம் பரிமாறிக்கொள்ளப்படும் போது இந்த அன்பு, காமத்துடன் இன்னொன்றும் வந்து சேர்கிறது. அதுதான் எதிர்பார்ப்பு. துணை அடுத்து என்ன செய்யப் போகிறான் அல்லது என்ன செய்யப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பு காதலர்களுக்குள் இருப்பதால் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தத்தில் இனம் புரியாத ஈர்ப்பு இருக்கிறது.
இப்போதெல்லாம் முத்தத்தை எப்படி கொடுத்தால் `கிக்` அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகளே நடத்தப்படுவதால் பல வகையிலான முத்தங்கள் தோன்றிவிட்டன. உதாரணமாக உதட்டோடு உதடு கவ்வும் `பிரெஞ்சு கிஸ்". இந்த முத்தத்தின் போது என்னென்ன மாற்றங்கள் இருவரது உடலுக்குள்ளும் நிகழ்கின்றன என்று ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள்.
முத்தத்தில் வேறுபாடு
பாலுறவின்போது ஆண், பெண் இருவரும் அடையும் உச்சக்கட்டத்தை, இந்த முத்தத்தை பரிமாறிக் கொள்ளும் போதும் அடையலாம் என்பதை நிரூபித்தது, அமெரிக்காவில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு. அந்த ஆழமான முத்தத்தை பரிமாறும் போது, அதை பரிமாறும் ஆண்பெண் இருவரது பால் சுரப்பிகளும் தூண்டப்படுவது அப்போது தெரிய வந்தது. பிரெஞ்சு கிஸ் இதழ்களோடு நின்று விடுவதில்லை மோகத் தீ பலமாக வீசி, இருவரது உடல்களும் பின்னிப் பிணைந்து விடுகின்றன. இன்றைய இளசுகள் இந்த முத்தத்தைத்தான் துணையிடம் விரும்புகிறார்களாம்.
முத்தத்திற்கு மரியாதை
ஒவ்வொரு நாட்டினர் இடையேயும் முத்தம் வேறு வேறு வழிகளில் கையாளப்படுகிறது. பயன்படுத்தும் வழிகள் பலவாக இருந்தாலும், அந்த முத்தத்தால் கிடைக்கும் சுகப்பரவசம் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது. பிற நாட்டினரைக் காட்டிலும் பிலிப்பைன்ஸ் காதலர்கள், நம்மவர்கள் காதலுக்கு மரியாதை செய்வதுபோல் முத்தத்திற்கு தனி மரியாதை கொடுக்கிறார்கள்.
அவர்களுக்குள் காதல் தோல்வி ஏற்படும்போதும் கூட, முத்தத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அதாவது, காதலியானவள் தனது உள்ளாடையையும், காதலன் அவனது உள்ளாடையையும் அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டு பிரிந்து விடுகிறார்கள். அதன்பின்னர், இருவரும் சந்தித்துக் கொள்வதே இல்லை. அதேநேரம், காதலி அல்லது காதலன் பற்றி எண்ணம் வரும்போதெல்லாம், அவள் அல்லது அவன் கொடுத்த உள்ளாடையை முத்தமிட்டு, தங்களது மனப்பாரத்தை இறக்கிக் கொள்கிறார்களாம்.

Monday, February 13, 2012

பற்களில் இடைவெளி தவிருங்கள்

Posted On Feb 13,2012,By Muthukumar

"பல் இல்லேன்னா சொல் போச்சு' என்ற சொலவடை பழக்கத்தில் உள்ளது. முகத்தின் வடிவத்தை, கட்டமைப்புடன் வைப்பதில், பல்லுக்கு இன்றியமையாத பங்கு உண்டு.
பற்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை எனில், வெகு சீக்கிரமே சொத்தை ஏற்பட்டு, பல பிரச்னைகளைக் கொடுத்து விடும்.
அனைவரும், ஆண்டுக்கு ஒரு முறை, பல் மருத்துவரிடம் சென்று, பற்களைச் சுத்தம் செய்து, சீர்கேடு இருப்பின், சரி செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
நாற்பது வயதைத் தாண்டினாலே, பற்களில் இடுக்கு விழத் துவங்கி விடும். இதைப் பலரும் கவனத்தில் கொள்வதே இல்லை; கவனித்தாலும், முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை.
பற்களைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ளாவிட்டால், முகம் விகாரமடையத் துவங்கும். பல் நகர்ந்த இடத்தில் ஏற்படும் குழிக்கு, மாற்றுப் பல் பொருத்திக் கொள்ளலாம்.
பல் குறித்த மேலும் பல சந்தேகங்களுக்கு, இதோ சில அறிவுரைகள்:
பற்சொத்தை, நுண்ணிய நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்கள் உள்ள பகுதியை பாதிக்கும்போது, பல்வலி ஏற்படுகிறது. பற்சொத்தை ஆழமாக ஊடுருவியதால் வேர் சிகிச்சை மூலம் சுத்தம் செய்து, பல்லை அடைக்க வேண்டும்.
இச்சிகிச்சையின் போது பல்லிற்கு உணர்வு அளிக்கக் கூடிய நரம்புகள் மற்றும் ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுவதால் அவை அகற்றப்படும். பல்லுக்கு நீர்ச்சத்துகள் இல்லாமல் இருந்தால் எளிதில் நொறுங்கும்.
வேர்சிகிச்சை முடிந்தபின், பல் மேல், "கேப்' செய்து பொருத்த வேண்டும். பல்லின் ஒரு பகுதி உடைந்து இருந்தால், வேர் சிகிச்சை செய்த வேர்களின் உள்ளே, "பேஸ்ட்' போன்ற சிறிய பொருளால் பல்லை உறுதிப்படுத்தி, "கேப்' செய்யலாம். இரண்டாக உடைந்து இருந்தால் அப்பல்லை எடுத்துவிட்டு செயற்கை பல்லை பொருத்த வேண்டும்.
குழந்தைகள் விளையாடும் போது...
ஸ்கேட்டிங், குத்துச்சண்டை, கால்பந்து விளையாட்டுக்களில் குழந்தைகளுக்கு முகத்தில் அடிபட வாய்ப்புகள் அதிகம். இவர்கள் "மவுத் கார்டு' உபகரணத்தை வாயினுள் பொருத்தி விளையாடலாம். இது ரப்பர் போன்று வளையும் தன்மை உடையது.
குழந்தைகள் தாடை அளவுக்கு ஏற்றாற்போல செய்யலாம். இதனால் விளையாடும்போது நேரடியாக பற்களுக்கு வரும் பாதிப்பை தவிர்க்கலாம்.
பல் இடைவெளிக்கு...
எல்லா பற்களிடையேயும் இடைவெளி இருந்தால் அவற்றை அடைப்பது தவறு. அப்படி அடைக்க முயன்றால், பற்களின் ஈறுகள் பாதிக்கப்படலாம். பற்கள் அளவு பெரிதாகவும் செயற்கையாகவும், தோற்றமளிக்கும். "கிளிப்' அணிவது சிறந்த வழி.
இதன் மூலம் பற்கள் தாடை எலும்பினுள் நகர்ந்து நெருங்குவதால், நிரந்தர சிகிச்சை முறையாக கருதப்படுகிறது. "கிளிப்' அணிய தயக்கமாக இருந்தால், தற்போது பற்களின் மேல் பொருந்தக் கூடிய நிறமில்லாத, கவர் போன்ற உபகரணங்கள் வந்துள்ளன.
அதை குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு அணிய வேண்டும். பற்கள் நகரத் துவங்கும்போது, வேறு, "செட்' வழங்கப்படும். பல்சீரமைப்பு நிபுணரை கலந்து ஆலோசனை பெற்று, தொடர் சிகிச்சையாக குறைந்த பட்சம் ஒரு ஆண்டு காலம் இவற்றை அணிந்தால் பற்களை சீராக்கலாம்.

ஏ! பணமே, நீ வரவாய் வந்தாலும் “வரி”யாய் செல்கிறாயே! (TAXES 23)

நீங்க இந்தியரா?! அப்ப‍ நீங்க‌  எந்த வேலையை செஞ்சாவது சம்பாதிக்கலாம்.ஆனால் வரி மட் டும் ஒழுங்கா கட்டினா வந்த வருமானம் எல் லாம் போயிரும். இது சில அரசியல் தலைவர் கள் சேவை செய்பவர்களுக்கு இது பொருந்தா து. அவங்கதான் “வரி” கட்டியதா அரசு ஆவண ங்களில் ஒரு “வரி”கூட இல்லையே இதை தமிழில் சொல்வ தை விட ஆங்கிலத்தில் சொல்வது எளிது.
 

வ‌ரவெல்லாம் வரிகளாய் செல்லும் வழிகள் 

 
1) Qus. : What are you doing?
Ans. : Business.
Tax : PAY PROFESSIONAL TAX!
2) Qus. : What are you doing in Business?
Ans. : Selling the Goods.
Tax : PAY SALES TAX!!

3) Qus. : From where are you getting Goods?
Ans. : From other State/Abroad
Tax : PAY CENTRAL SALES TAX, CUSTOM DUTY & OCTROI!

4) Qus. : What are you getting in Selling Goods?
Ans. : Profit.
Tax : PAY INCOME TAX!

5) Qus. : How do you distribute profit ?
Ans : By way of dividend
Tax : Pay dividend distribution Tax

6) Qus. : Where you Manufacturing the Goods?
Ans. : Factory.
Tax : PAY EXCISE DUTY!

7) Qus. : Do you have Office / Warehouse/ Factory?
Ans. : Yes
Tax : PAY MUNICIPAL & FIRE TAX!

8) Qus. : Do you have Staff?
Ans. : Yes
Tax : PAY STAFF PROFESSIONAL TAX!

9) Qus. : Doing business in Millions?
Ans. : Yes
Tax : PAY TURNOVER TAX!

Ans : No
Tax : Then pay Minimum Alternate Tax

10) Qus. : Are you taking out over 25,000 Cash from Bank?
Ans. : Yes, for Salary.
Tax : PAY CASH HANDLING TAX!

11) Qus.: Where are you taking your client for Lunch & Dinner?
Ans. : Hotel
Tax : PAY FOOD & ENTERTAINMENT TAX!

12) Qus.: Are you going Out of Station for Business?
Ans. : Yes
Tax : PAY FRINGE BENEFIT TAX!

13) Qus.: Have you taken or given any Service/s?
Ans. : Yes
Tax : PAY SERVICE TAX!

14) Qus.: How come you got such a Big Amount?
Ans. : Gift on birthday.
Tax : PAY GIFT TAX!

15) Qus.: Do you have any Wealth?
Ans. : Yes
Tax : PAY WEALTH TAX!

16) Qus.: To reduce Tension, for entertainment, where are you going?
Ans. : Cinema or Resort.
Tax : PAY ENTERTAINMENT TAX!

17) Qus.: Have you purchased House?
Ans. : Yes
Tax : PAY STAMP DUTY & REGISTRATION FEE !

18) Qus.: How you Travel?
Ans. : Bus
Tax : PAY SURCHARGE!

19) Qus.: Any Additional Tax?
Ans. : Yes
Tax : PAY EDUCATIONAL, ADDITIONAL EDUCATIONAL & SURCHARGE ON ALL THE CENTRAL GOVT.’s TAX !!!

20) Qus.: Delayed any time Paying Any Tax?
Ans. : Yes
Tax : PAY INTEREST & PENALTY!
 
21) Qus.: Do you own a Vehicle?
Ans.: Yes
Tax: Pay Road Tax!
 
22) Qus.: Do you drive a Vehicle?
Ans.: Yes
Tax: Pay Toll Tax!
23) INDIAN :: Can I Die Now??
Ans :: WAIT WE ARE ABOUT TO LAUNCH THE FUNERAL TAX!!!