horse

horse

Saturday, July 28, 2012

மனித உணர்வுகளிலே முதன்மையானது பாலுணர்வுதான்!!

தம்பதியருக்கு இடையேயான நெருக்கத்தை உணர்த்துவது ஸ்பரிசம் தான். அதனால்தான் திருமணநாளன்று தாலிகட்டி முடித்த உடனே தம்பதியரின் கைகளை பிடித்து கட்டி அவர்களுக்கு இடையேயான நெருக்க த்தை உணர்த்துகின்றனர். அதேபோல் இந்து மத சடங்குப்படி நடக்கும் திரு மணங்களில் அக்னியை வலம் வரும் போது கணவனின் கைகளை பிடித்து மனைவி வலம் வருகிறாள்.
தம்பதியர் தினம் தினம் ஸ்பரிசத்தால் ஒருவருக்கொருவர் அன்பை உணர்த்த வேண்டும் அப்பொழுதுதான் குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் தழைக்கும் என்கின்றனர் நிபு ணர்கள். பத்து வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்தும் அன்பினை ஒரு முத்தத்தினாலோ, சின்ன ஸ்ப ரிசத் தினாலோ வெளிப்படுத்தி விடலா ம் என்கின்றனர்.
மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வுதான். மனித உணர்வுக ளிலே முதன்மையானதும் பாலு ணர்வுதான். இது உலகிலுள்ள ஆண்-பெண் இருபாலருக்கும் பொ ருந்தும். ஆனால் மனித சமுதாயம் இதனை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதில்லை. மனித இனத்தில் ஆண்பெண் என இரு பிரிவினரு க்கும் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களின்போது, இயற்கையான பாலுணர்வுகள் இயற்கையாகவே உற்றெடுக்கும்.இது அறிவியல் பூர் வமான உண்மை என்று பல உளவி யல் அறிஞர்கள் எடுத்துரைத்துள் ளார்கள்.
 
பாலுணர்வு வெளிப்படும் நேரத் தில் ஆரோக்கியமான தாம்பத்ய உறவில் ஈடுபடுவது தம்பதியருக்கு முழு இன்பம் கிடைக்கும். ஆண்-பெண் தாம்பத்ய உறவில் ஈடு படும் போது இருவரது உடல் முழுவதும் பாலுண ர்வுகள் மையம் கொண்டுவிடும். அந்த நொ டிப் பொழுதில் இரண்டு மனங்களும் புற சூழ்நிலையை மறந்து ஒன்றுபட்டு விடுகிற து. இருவரது இதய துடிப்பும் ஒன்று பட்டு ஒலிக்கும். இருவரது சுவாசமும் ஒன் றாகி விடும் என்கின்றனர் நிபுணர்கள்.
 
இந்த நிலைதான் ஆண்-பெண் என இரு உயிர்கள் இணைந்து ஒரு உயிராகும் நிலை. இந்த நிலையின்போது ஆண்-பெண் இருபால ரும், ஒரு சேர பெறுகின்ற ஸ்பரிச உணர்வானது, மலர்கள் நம் மீது படுகின்றபோது ஏற்படுத்துகின்ற ஸ்பரிசத்தைவிட மிகவும் மென் மையானது. இத னை கருத்தில் கொண்டுதான் ‘மலரினும் மெ ல்லியது காமம்’ என்று முன்னோர்கள் கூறியுள்ளன ர். இந்த மென்மையான ஸ்பரி சத்தை பெறுகின்றபோதுதான் , ஆண்-பெண் இருவரிடத்திலு ம் உள்ள பாலுணர்வுகள் மறைந்து, பாச உணர்வுகள் ஊற்றெடுக்கும் என்கின்றனர்.
 
இதனால் தம்பரியரிடத்திலே வன்முறை உணர்வுகள் குறைந்து, மனதிலே அன்பு வீச தொடங்கி விடும். இந்த அன்பு தெய்வீ கமானது. இதனால் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் மன பக்குவத்தை பெற்றுவிடுவார்கள் என்கின்ற னர் நிபுணர்கள். எனவே தம்பதியர் ஒருவருக்கொருவர் ஸ்பரிசத்தின் மூலம் அன்பான இல்லற வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள லாம்.

Friday, July 27, 2012

டீன் ஏஜில் அழகை பாதுகாப்பது எப்படி?

Posted On July 27,2012,By Muthukumar
டீன் ஏஜ் பெண்கள், உணவில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உண்டு. பழம், சாலட், ஏடு நீக்கிய பால் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். சாக்லேட், கேக், பொரித்த உணவுகளை அதிகமாக உணவில் சேர்க்கக் கூடாது. டூ சருமம் பளபளப்பாக இருக்க, கிரீம் பயன்படுத்த தேவையில்லை. குளிர்ந்த நீரும், சோப்பும் போதும். டூ முகப்பருவை ஒரு போதும் உடைத்து விடக் கூடாது. அப்படி உடைத்தால், அது கரும்புள்ளியாக மாறி, அழகை கெடுக்கும். டூ கஸ்தூரி மஞ்சளையும், சந்தனத்தையும் அரைத்து, முகத்தில் பூசினால் முகப்பரு நீங்கும். டூ வறண்ட சருமத்தை கொண்ட பெண்கள், வாரத்திற்கு ஒரு முறை ஆலிவ் எண்ணெயை முகத்தில் தேய்த்து, இளம் சுடு நீரில் சோப்பு உபயோகித்து கழுவலாம். டீன் ஏஜ் பெண்கள், பேபி சோப் அல்லது கிளிசரின் சோப் பயன்படுத்துவது நல்லது. டூ டீன்-ஏஜ் பெண்கள், பற்களை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சீரற்ற பற்களின் வரிசையை சரி செய்யவும், உயர்ந்து நிற்கும் பற்களை சமன்படுத்தவும் பல் மருத்துவரை அணுகவும்.
டூ அளவுக்கு அதிகமாக மேக் - அப் போட்டுக் கொள்ளக் கூடாது. அழகாக இருக்க வேண்டுமானால், உடற்பயிற்சியோ, நடை பயிற்சியோ அவசியம் செய்ய வேண்டும்.

கூச்சம் என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவான ஒன்றுதான்

கூச்சம் என்பது ஆண், பெண் எல்லோர்க்கும் பொதுவான ஒன்று தா ன். இதில் வயது வித்தியாசமும் கிடையாது. இது உளவியல் அறிஞர் கள் சொல்லும் உண்மையாகும். எனவே கணவனோ, மனைவி யோ கூச்சமின்றிப்பேசினால் தா ன் ஒருவருக்கு ஒருவர் தங்கள் மனதில் உள்ள அந்தரங்க ஆசை களைப்பரிமாறி செக்சில் முழு இன்பத்தையும் அனுபவிக்க முடி யும். சிலர் 50 வயதைக் கடந்த பின்னரும் கூட இன்னும் செக்ஸ் பற்றிய சில உண்மைகளைப் புரிந்து கொள்ள முடி யாமல் இருப்பது வேதனையான விஷயம்.
அதற்கு முக்கியக் காரணம் அவர்கள் மனதில் இருக்கும் கூச்சம். தனது ஆசைகளைச் சொன்னால் கணவர் நம்மைக் காமவெறி பிடித் தவள் என்று பெண்கள் நினைத்துக் கொள்வதும் அதே போல ஆண் கள் நினைத்துக் கொள்வதும் தான்.
இது குறித்து மருத்துவரிடம் கேட்கலாமா? அல்லது மற்ற தொரிந்த நண்பர்களிடம் அல் லது தோழியரிடம் கேட்கலா மா? கேட்டால் தப்பாக நினை த்துக் கொள்வார்களா? என்கி ன்ற எண்ணம் தான் அதற்குக் காரணம்.
இவர்கள் மற்றவரிடம் தான் கேட்க வேண்டாம். செக்ஸ் மருத்துவ நிபுணர்களிடமாவது கேட்டு தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டாமா? இன்னும் ஒரு சிலருக்கு செக்சில் அல்லது ஒரு செயலில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். ஆனால் இதை எப்படி நம து துணையிடம் கேட்பது என்ற தயக்கம் இருக்கும். நடுத் தர வயதை த் தாண்டிய பலரிடம் செக்சில் ஆர்வம் குறைந்து வருவதாக மருத்து வர்களிடம் ஆலோசனை பெற வருபவர்க ளின் பேச்சிலிருந்து தெரிந்து கொள்ள‍லாம்.  
தங்களுக்கு வயதுக்கு வந்த பிள்ளைகள் இருக்கின்றனர் என்ற எண் ணத்தில் பலர் செக்சைத் தவிர்த்து விடுகிறார்கள். இன்னும் சிலர் முற்றிலுமாக செக்சிலிருந்து விலகிப்போய் விடுகின்றனர். அன்றாட வாழ்க்கையில் சந்தோஷத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்க, வாழ்க்கை அர்த்தம் பொதிந்த விஷயம் என்பதற்கு செக்ஸ் துணை புரியும் என்பதை பலர் உணராததால் இவ்வாறு உள்ளனர்.

Wednesday, July 18, 2012

கால்களை மிருதுவாக்கும் மீன் கடி வைத்தியம்!

Posted On July 18,2012,By Muthukumar
அதிக தூரம் நடப்பதால் சிலருக்கு பாதங்கள், விரல்களில் வலி ஏற்படும். பாதங்களை தடவி கொடுத்தாலோ, விரல் களில் சொடக்கு போட்டாலோ, ஒரு வித இதமான சுகம் ஏற்படும். ஆனாலும், சிறிது நேரத்திலேயே, மீண்டும் வலி ஆரம்பித்து விடும்.
இப்படிப்பட்ட பிரச்னை களால் பாதிக்கப்பட்டவர்களுக் காகவும், பாதங்களை அழகாக வைத்துக் கொள்ள விரும்பு வோருக்காகவும், பிரத்யேகமாக ஒரு சிகிச்சை முறை, உலகின் பல நாடுகளில் தற்போது செயல் படுத்தப்பட்டு வருகிறது.
"மீன் ஸ்பா' என, அழைக் கப்படும் இந்த சிகிச்சை முறை யில், ஒரு சிறிய தொட்டிக்குள் தண்ணீரை நிரப்பி, அதற்குள், "கர்ரா ரூபா' என்ற வகை சிறிய மீன்களை உலவ விடுகின்றனர். பின், பாதங்களை அழகாக்க விரும்புவோரின் கால்களை, அந்த தொட்டிக்குள் விடுகின்றனர்.
குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு பின், கால்களை தொட்டியில் இருந்து வெளியில் எடுத்து விடலாம். மீன் கடிக்குப் பின், பாதங்கள் மிக அழகாக தோன்றுவதுடன், ஏற்கனவே அவற்றில் இருந்த வலி எல்லாம் மறைந்து, புத்துணர்வு ஏற்படு வதாகவும் கூறுகின்றனர்.
ஜப்பான், குரேஷியா, பெல் ஜியம், சீனா உள்ளிட்ட நாடு களைத் தொடர்ந்து, இந்தியா விலும் இந்த மீன் கடி வைத்தியம் பிரபலமாகி வருகிறது.