horse

horse

Tuesday, December 30, 2014

குழந்தை இல்லாத தம்பதிகளின் கனிவான கவனத்திற்கு



கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன ?
கர்ப்பம் தரிப்பதற்கு,
பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22-26. இதற்கு விதிவிலக்குகளும் உண்டு.
இந்த வயதுகளில் இல்லை எனறால் குழந்தை பிறக்காதா? அப்படிஇல்லை. இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க அதிகரிக்க கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண் டே போகும்.
சில புள்ளி விவரங்கள்:
30 வயதில், 75% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 91% நான்காண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.
35 வயதில், 66% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள்,84% நான்காண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள். 40 வயதில், 44% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 64% நான்காண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.
ஆண்களின் வயது கர்ப்பத்துக்கு முக்கியம் இல்லையா 
இதுவும் ஓரளவுக்கு முக்கியமே, ஆனால் பெ ண்ணின் வயது அளவுக்கு முக்கியமானதல்ல. இதற்குக் காரணம், பெண்கள் பிறக்கும்போதே, அவர்க ளுக்கு கருமுட்டையின் எண்ணி க்கையும் ஆரோக்கியமும் நிர்ண யிக்கப்படுகின்றன.
இக்கருமுட்டைகள் வயதாக வயதாக, எண்ணிக்கையிலும் ஆரோக் கியத்திலும் தரம் குறைந்து போய்விடும். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு விந்துக்கள்தினம் உருவாகும். ஆண்களுக்கும் விந்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் வயதாக, ஆக, குறையும்.
ஆண்கள் பற்றிய புள்ளி விவரம்:
20–39 வயதில், 90% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும். 40–69வயதில், 50% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தி யாகும்.
80வயதிற்குமேல், 10%ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற் பத்தியாகும்.
கருமுட்டை உற்பத்தியாகும் காலம்:
பெண் வயதுக்கு வந்தபின், சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் (Fallopian tube) வழியாய் கீழிறங்கும். இதனைமுட்டை வெளியீடு என்று அழைப்பார்கள், ஆங் கிலத்தில் இதற்கு ஓவுலஷன் (ovulation) என்று பெயர்.
கர்ப்பம் தரிக்க ஏதுவான நாட்கள் எவை:
எந்த நாட்களில் நீங்கள் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்பதுதான் இதற்கு முக்கியம். கரு முட்டை, கருப்பையில் இருந்து வெளிவந்து, 18-24மணிநேரத்துக்குள் ஆணின்விந்துவை சேர வேண்டும். அதனால் இந்த கால கட்டத்தில் உங்கள் பால்லோபி யன் குழாய்களில் (Fallopian tube) விந்து இருக்க வேண் டும். ஆணின் விந்து (sperm) சராசரி யாக 3–5 நாட்கள் வரை பெண் ணின் பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்கும்.
உடலுறவு கொள்ள சரியான கால கட்டம் எது?
உங்கள் முட்டை வெளிவரும்போது, அதாவது ஒவுலஷன் (Ovulation) நடக்கும்போது, அதற்கு இரண்டு நாட்கள் முன்னாலும், இரண்டு நாட்கள் பின்னா லும், உடலுறவு கொள்வது மிகுந்த பய னளிக்கும். முட்டை வெளியீடு (Ovulation) காலம் நடக்கிறது என்று எப்படிதெரிந்துகொள்வது?இந்நாட்களில் உடலில் பல மாற்றங்கள் நடக்கும். அவற்றை கவனித்து உங்களுக்கு இந்த நிகழ்வு நடக்கிறது என்று அறி ந்து கொள்ளலாம்.
1.உங்கள் பெண்ணுருப்பிலிருந்துவரும் திரவம்  (Cervical mucus) மிகவும் வழவழப்பாகவும், ஈரமானதாகவும்ஆகிவிடு ம்.
2. மேலும், உங்கள் மார்பகங்கள் மென்மையாக ஆகும். வயிறு பிடிக்கும் (belly cramps), காம வேட்கை அதிகரித்தல், ரத்தச்சொட்டுக்கறை (spotting), உங்கள் கணவருக்கு அருகிலேயே இருக்கத் தோன்றும்.
3. முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்தததும் உங்கள் உடல் வெப்பம் 0.4°F – 0.8°F அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மாமீட்டர் (Digital Thermo meter) ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து, உங்கள் உடல் வெப்பத்தை பட்டியல் போட்டு, இந்த காலத்தை கண்டு பிடிக்கலாம். இதற்கான பட்டியல் மாதிரி களை இப்போது இணையங்களிலே யே தருகிறார்கள். இதன் மாதிரியை நீங்கள் இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
http://www.storknet.com/cubbies/preconception/bbt-blank.pdf
4. உங்களுக்கு மாத விலக்கு ரொம்ப சீராகவும், சரியா க 28 நாட்களுக்கு ஒரு முறையும் நடந்தால், உங்கள் முட்டை வெளியீடு (Ovulation) நாள் சரி யாக 14 ஆம் நாள் நடக்கும். உங்களுக்கு மாதவிலக்கு சீராக வரவில்லை என்று சொன்னால், முட்டை வெளியீடு நாள் என்பது, உங்கள் மாத வில க்கு ஆரம்பிக்கும் நாளிலிருந்து சரியாக 14 நாட்கள் முன்னால் நடக்கும். உதாரணமாக, உங்க ள் மாதவிலக்கு சுழற்சி 31 நாட் கள் என்றால், உங்கள் முட்டை வெளியீடு நாள் 31- 14 = 17. 17 ஆம் நாள்தான் உங்கள்முட்டை வெளியீட்டுநாள். இதுதவிர ovulation testing kits போ ன்ற பொருட்கள் இப்போதெல்லாம் புழக்கத்தில் உள்ளன. அவை உங்கள் சிறுநீரில் உள்ள ஹார்மோன் அளவைக் கொண்டு உங்கள் முட்டை வெளியீட்டுநேரத்தை சரியாக சொல்லி விடும்.
கர்ப்பமடைய முயற்சி செய்யு ம்போது எதை எதை தவிர்க்க வேண்டும்?
உடலுறவின் போது நீங்கள், எண்ணெய், எச்சில், ஜெல் போன்றவை பயன்படுத்தினால், அவற்றை நிறுத்திவிடுங்க ள். ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளைவி க்கும். குழந்தைகளுக்கான எண்ணெய் (baby oil) தான் ஓரளவு ஆபத்து இல்லாதது. முடிந்த வரை எந்த விதமான லூப் ரிகன்ட் (Lubricant) பொருட்களை உப யோகிக்காமல் இருப்பதே நல்லது.
பலபெண்கள் உடலுறவு முடிந்ததும் தங்கள் பெண்குறியை சுத்தம் செய்யபலதிரவங்களையு  ம், தண்ணீரையும் உள்ளே பீய்ச்சி அ டிக்கிறார்கள். இதை Vaginal Douche என்று ஆங்கிலத்தில் என்று சொல்வார்கள். நீங்கள் கருப்பிடிக்க நினஈகும் கட்டத்தில் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத்திரவங்கள் விந்துவைக் கொல்வதுடன், பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கும்.

Tuesday, December 9, 2014

மசாஜ் செய்கிற மாயம்


ஹெல்த் நாள் முழுக்க வேலை… அதன் காரணமாக அசதி… யாரேனும் கை, கால்களையோ, தோள்பட்டைகளையோ அழுத்திப் பிடித்து விட்டால் தேவலை எனத் தோன்றும். அப்படி யாரேனும் பிடித்து விட்டால் அத்தனை அசதியும் களைப்பும் மாயமாகும். உடனடி புத்துணர்வு பெறும் உடல். அதுதான் மசாஜ் செய்கிற மாயம்! அழகையும் ஆரோக்கியத்தையும் ஒருசேர மேம்படுத்துகிற அற்புத விஷயமான மசாஜ் பற்றி தெரிந்த, தெரியாத தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் சஞ்சீவனம் ஆயுர்வேதிக் தெரபி சென்டரின் மருத்துவர் அரவிந்த். ‘நோயில்லாத நிலை மட்டுமே ஆரோக்கியத்தின் அடையாளமில்லை.
உடல் மற்றும் மனத்தளவிலான முழுமையான ஷேமமான நிலையே உண்மையான ஆரோக்கியம்’ என்று உலக சுகாதார நிறுவனமே அறிவித்திருக்கிறது. ஆயுர்வேதமும் அதையே முன்மொழிகிறது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஒருங்கே கொண்ட சிகிச்சைகளில் மசாஜுக்கு முக்கிய இடமுண்டு. அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல் என்பது மக்களின் அவசியக் கடமைகளில் ஒன்றாக இருந்தது. உச்சி முதல் பாதம் வரை எண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து குளிப்பதன் மூலம் உடல் சூடு தணியும். சருமம் அழகு பெறும். ரத்த ஓட்டம் சீரடையும். ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தம் குறையும். எல்லாவற்றையும் விட முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வாரம் தவறாமல் மசாஜ் செய்து கொள்கிறவர்களுக்கு முதுமைத் தோற்றம் தள்ளிப் போய், இளமை நீடிக்கும். உடல் சூடு அதிகமாவதன் விளைவாக சருமத்தில் பருக்கள், கட்டிகள், கொப்புளங்கள் கிளம்பும். ஸ்ட்ரெஸ் அதிகமிருக்கும் போது, அழகு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீவிரமடையும்.ஒருவரின் உடலில் உள்ள வாதம், பித்தம் மற்றும் கபத்தின் அளவுகளை அறிந்து, அதற்கேற்ற எண்ணெய்கள் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபட லாம். முறையாக செய்யப்படுகிற மசாஜ் அழகையும் ஆரோக்கியத்தையும் அதிகரிப்பதைப் போலவே, முறையற்று, தவறாகச் செய்கிற மசாஜ் எதிர்மறையான பலன்களைத் தரும் என்பதையும் மறக்க வேண்டாம். யார் வேண்டுமானாலும் எந்த எண்ணெயை வைத்தும் மசாஜ் செய்து கொள்ளக் கூடாது. மசாஜ் பழக்கத்தைப் பின்பற்ற முடிவு செய்தால், அதற்கு முன் ஆயுர்வேத மருத்துவர் அல்லது அழகுக்கலை நிபுணரைக் கலந்தாலோசித்து விட்டு, சரியான எண்ணெயையும் மசாஜ் முறையையும் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது. தன்வந்த்ர தைலம், பிண்ட தைலம் இந்த இரண்டும் உடல் சூட்டைத் தணித்து, சரும அழகை மேம்படுத்தக் கூடியவை. நால் பாமராதி தைலம், ஏலாதி தைலம் மற்றும் குங்குமாதி தைலம் ஆகியவையும் சரும அழகையும் நிறத்தையும் கூட்டக் கூடியவை. அதே போல பொடுகு, முடி உதிர்வது போன்ற கூந்தல் பிரச்னைகளுக்கு மாலத்யாதி தைலம், செம்பருத்தியாதி தைலம், துர்துற பத்ராதி தைலம் போன்றவை ஏற்றவை. மாதவிலக்கு சுழற்சி முறையின்றி இருப்பவர்களும், ஹார்மோன் பிரச்னைகள் உள்ளவர்களும் முறையான ஆலோசனை பெறாமல் ஆயில் மசாஜ் செய்யக் கூடாது. எண்ணெய் குளியல் என்றாலே நிறைய பேருக்கு அலர்ஜி. ஜலதோஷம் பிடிக்குமோ என்கிற பயம். இவர்கள் எண்ணெய் குளியலுக்குப் பிறகு தலையை நன்கு காய வைத்து, ராஸ்னாதி சூரணத்தில் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) ஒரு சிட்டிகையை எடுத்து, உச்சந்தலையில் வைத்துத் தேய்த்து விட்டால் போதும். மண்டைக்குள் இருக்கும் நீரையெல்லாம் அது எடுத்து விடும். சளி பிடிக்காது. தன்வந்த்ர தைலத்தை 30 மி.லி. எடுத்து, வெதுவெதுப்பாக்கி, முடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து, அரை மணி நேரம் ஊற வைத்து சீயக்காய் உபயோகித்துக் குளிக்கவும். முதல் முறை இந்த எண்ணெய் குளியல் எடுப்பவர்கள் எண்ணெய் தேய்த்த உடனேயே குளித்து விடலாம். க்ஷீரபலா தைலம் என ஒன்று இருக்கிறது. இதை ரொம்பவும் குளிர்ச்சியாகவும் இல்லாமல், சூடாகவும் இல்லாமல் லேசான சூட்டில் தலையில் தடவிக் குளிக்கலாம். நல்லெண்ணெயில் நான்கைந்து மிளகு போட்டு வெதுவெதுப்பாகக் காய்ச்சி, தலையில் தடவிக் குளிக்கலாம். ரொம்பவும் சூடான உடல் வாகுள்ளவர்கள் தன்வந்த்ர தைலத்தையும் பலா அஷ்வகந்தா தைலத்தையும் சம அளவு கலந்து வெதுவெதுப்பாக்கி, தலையில் தடவி, 30 நிமிடங்கள் காத்திருந்து, சீயக்காய் உபயோகித்து அலசலாம். மசாஜ் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்… திரைப்படங்களில் பார்க்கிற மாதிரி படபடவென்றோ, ஆக்ரோஷமாக அடித்தோ மசாஜ் செய்யக் கூடாது. மிகவும் மென்மையாக, அதிக அழுத்தம் கொடுக்காமல், தாங்கும் சக்திக்கேற்பவே மசாஜ் செய்ய வேண்டும். எப்போதும் மேலிருந்து கீழ்நோக்கியே மசாஜ் செய்ய வேண்டும். சாப்பிட்ட உடன் மசாஜ் செய்யக் கூடாது. மாதவிலக்கு நாட்களில் மசாஜ் செய்வதைத் தவிர்க்க வேண்டும். சொதசொதவென வழிகிற அளவுக்கு எண்ணெய் வைத்துதான் மசாஜ் செய்து குளிக்க வேண்டும் என்றில்லை. அளவாக உபயோகிப்பதுதான் சரியானது. கர்ப்பிணிகள் முதல் 3 மற்றும் இறுதி 3 மாதங்களில் மசாஜ் செய்து கொள்ளக்கூடாது. இடைப்பட்ட மாதங்களில் மருத்துவரின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின் பேரில் மிதமான மசாஜ் செய்து கொள்ளலாம். அது அவர்களுக்கு இடுப்பெலும்பு தசைகளைத் தளர்த்தி,வலி நீக்கி, சுகப்பிரசவத்துக்கு உதவும். அதே போல பிரசவத்துக்குப் பிறகு மசாஜ் செய்து கொள்வதன் மூலம் தளர்ந்து போன தசைகளை இறுகச் செய்யவும் வயிறு மற்றும் இடுப்புப் பகுதிகள் இறுக்கம் பெறவும் செய்ய முடியும். இதய நோயாளிகள் மசாஜ் செய்யக் கூடாது. உடலில் ஏதேனும் வலி இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றே மசாஜ் செய்து கொள்ள வேண்டும். ஓரளவு வெயில் இருக்கும் நேரம்தான் மசாஜுக்கும் எண்ணெய் குளியலுக்கும் ஏற்றது. உச்சி வெயிலுக்கு முன்பான நேரம் மிகவும் உகந்தது. வாரம் ஒரு முறையோ, இரு முறையோ எண்ணெய் மசாஜ் மற்றும் குளியல் எடுப்பது ஆரோக்கியம் காக்க உதவும்.

Tuesday, December 2, 2014

திருமண வாழ்க்கையின் மீது சலிப்பு தட்டி விட்டதா?




திருமணம் செய்து கொள்வது சுலபம். திருமணத்திற்கு பிறகு சந்தோஷமாக இருப்பது என்பது கணவன் மனைவி என இருவரும் சேர்ந்து விளையாடும் ஒரு விளையாட்டே. நீங்கள் புதிதாக திருமணம் ஆனவர் என்றால், தினமும்
உங்கள் துணையைப் பற்றி புதிதான விஷயங்களைத் தெ ரிந்து கொள்ளும் சாகசங்களை உங்கள் திருமண வாழ்க்கை உங்களுக்கு அளிக்கும்.
 ஆனால் காலம் நகரும்போது , குழந்தைகள் மற்றும் பொறுப்புகள் என வாழ்க்கையி ல் பெரிய மாற்றங்கள் ஏற்படும். அப்போது காதல் என்ற அந்த தீப்பொறி மெதுவாக மறையத் தொடங்கும். உங்கள் துணையுடன் ஒரே மாதிரி யான வாழ்க்கையை வாழ தொடங்கி விடுவீர்கள். ஒரே பாட்டுக்கு நடனம் ஆடிக்கொ ண்டிருப்பதால் அதன் அனைத்து நடன அசைவுகளும்உங்களுக்கு தெரிந்தவையாகதா ன் இருக்கக்கூடும்.
அப்படி ஒரே மாதிரியான வாழ்க் கையை வாழ்வதால், வாழ்க்கை யின் மீது சலிப்பு தட்டி விட்டதா? அப்படியானால் உங்கள் உறவில் சில புதுமைகளையும், புத்துணர்ச்சியையும் புகுத்த வே ண்டும்.

உங்களையும் உங்கள்து ணையையும் மீண்டும் ஒரு முறை கண்டுபிடியுங்கள். ஏதாவது காபி ஷாப் செல்லுங்கள், ஒளிந்து விளையாடுங்கள், பப் போன்ற இடங்களுக்கு சேர்ந்து செல்லுங்கள். வீட்டிற்கு சென்றால் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களான குடும்பம், குழந் தைகள், பில்கள் போன்றவற் றை தவிர எதைப் பற்றி வேண் டுமானாலும் பேசுங்கள். காதலி த்த நாட்களில் எப்படி இருந்தீர் கள் என்பதை நினைவு கூர்ந்து அந்த சொர்க்க நாட்களை மீண் டும் கொண்டு வாருங்கள்.
 உங்கள் காதலை சைகள், முத்தங்கள், முக்கியமாகவார்த்தைகளால் அடிக்கடி வெளி ப்படுத்துங்கள்.”ஐ லவ் யூ” என கூறுங்கள். அப்படிசெய்யும் போது அவரின் கண்ணை பார்த்து சொல் லுங்கள்.
வெளியிடங்களுக்கு செல்லும் போ து உங்களின் ஸ்பரிசம் அவர் மீது அதிகம் படுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கைக ளைப் பற்றிக் கொள்வது, கட்டிப் பிடிப்பது, முகத்தை, கூந்தலை, கழுத்தை தொடுவது போன்றவற்றை செய்யலாம். இப்படி உடலுறவை சம்பந்தப் படுத்தாமல் அரவணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்மீது நீங்கள் கொண்டிருக் கும் நெருக்கம் அவருக்கு தெரிய வரும். வெட்கப் பட்டு ஒதுங்கி விடாதீர்கள். எப்படி ஒருவர்மீது ஒருவர் காத ல், அன்பு மற்றும் அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதை உங்கள் குழந்தைகள் பார்க்க வும், உணரவும் செய்யுங்கள்.
உங்கள் துணையை எதற்காக வும் புறக்கணிக்காதீர்கள். வாரம் ஒரு முறையாவது ஆச் சரியங்களை அளியுங்கள். அது எதுவாக வேண்டுமா னாலும் இருக்கலாம் – அது காதல் கடிதம் அல்லது பூச் செண்டு அல்லது வார இறு தி சுற்றுலா என எதுவாக வேண்டுமானாலும் இருக்க லாம். திடீரெனதோன்றுவ தை செய்யுங்கள்! அது மழை யில் நடப்பதாக இருக்கட்டு ம் அல்லது வேலைக்கு விடுப்பு விடுவதாக இருக்கட்டு ம் அல்லது படத்திற்கு போவதாக இருக்கட்டும். உங்க ள் உறவில் மீண்டும் அந்த பைத்தியகாரத்த னங்களை கொண்டு வாரு ங்கள்.
எதற்கும் காலம் கடந்து போ கவில்லை. உங்களுக்கு எந் தவகை நடனம் வருகிற தோ அதனை ஆடுங்கள். அது சல்சா, பால்ரூம் நடன ம் அல்லது டாங்கோ என எதுவாக வேண்டுமானாலும்இருக்கலாம். அது உங்கள் கூச் சங்கள் மற்றும் தடைகளை நீக்குவதோடு மட்டுமல்லாது, உடல் மற்றும் உணர்ச்சி ரீதியா னவேறுபாடுகளை கொண்டு ள் ள நீங்கள் இருவரும் ஒன் றாக இணைய வைக்க உதவும்.

உங்கள் தோற்றத்தின் மீது அக்கறை கொள்ளாமல் சோ ம்பேறியாக இருக்காதீர்கள். வெளியே படத்திற்கு செல்லு ம் போதோ அல்லது படத்தி ற்கு செல்லும் போதோ உங்கள் துணையுடன் செல்லும் போது நீங்களும் அழகாக தெரிய வேண்டும் என அவர்விரும்புவார் அல்லவா? சின்ன சின்ன விஷயங்க ள் கூட அந்த காதல் பொறியை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். நேரம்கிடைக்கவில்லை என்று ஏதாவது சாக்கு போக்குசொல்லாதீர்கள். இந்த சாக்குகளுக்கு ஒரு தீர்வை கண்டுபிடியுங்கள் . அதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சி உங்கள் துணை மற்றும் திருமண வாழ்க்கைக்காக தானே!

Wednesday, October 1, 2014

தாம்பத்ய உறவால் ஏற்படும் எதிர்ப்புச் சக்தியும்! தடுக்க‍ப்படும் நோய்களும்!

Posted on  by Muthukumar

ஒவ்வொரு மனிதனையும் ஆரோக்கியத்துடன் வைத்திருக்கஉதவுவது நோய் எதிர்ப்பு சக்தி. இது இல்லாத மக்க ளிடம் தான் ஏராளமான நோய்கள் வந்து `பசக்’கெ ன ஒட்டிக் கொள்கிறது. நோயில் சிக்கும் மனிதனி ன் ஆயுள் குறைவதோடு மருத்துவத்திற்காகச் செய் யும் செலவுகள் சொத்துக் களை விற்கும் அளவுக்கு
கொண்டு வந்து விடுகிறது.
ஆனால் பைசா செலவு இல்லாமல் மனிதனுக்கு நோய் எதிர் ப்பு சக்தியை தாம்பத்யம் வாரி வழ ங்குவதாக சமீபத்தைய ஆராய்ச்சி கள் மூலம் தெரிய வந்துள்ளது என் கிறார் சென் னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையத் தைச் சேர்ந்த பிரபல `செக்சால ஜிஸ்ட்’ நிபுணர் டாக்டர் காமராஜ். அவர் மேலும் கூறியதாவது:-
ஆண்-பெண் இடையேயான தாம்ப த்ய உறவின் போது ஐ. ஜி.ஏ. என்ற வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிற து. டி.எச். இ .ஏ. என்ற ஹார்மோன் உடலில் கூடுதலாக சுரக்கும். வாரத்தில் 2 முறை உறவில் ஈடுபடுவோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் இந்தி யா போன்ற நாடுகளில் பல நூறு கோடிகள் செலவிடப்படு கிறது.
முறையான உறவை மேற்கொ ண்டால் இந்த செலவுகள் அனைத்தும் அரசுக்கு மிச்சமா கும். சமீப காலமாக நம் நாட்டில் மாரடைப்பால் மரணம் அடைவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு முறையற்ற உறவு தான் காரணம் என்று கண்டுபிடித்து ள்ளனர். உறவின் போது ஆணி ன் உயிரணு பெண் உடலில் பாய்வதால் `ஆக்சிடோஜன்’ அதி க அளவில் சுரக்கிறது.
இதனால் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படாது.பெரும்பாலான நாடுகளில் மார் பக புற்று நோய் அதிகரிப்புக்கு முறையற்ற உறவு தான் காரணம் என்று கண்டறியப் பட்டுள்ளது. முறையான உறவு மூலம் நம் நாட்டில் ரூ.125 கோடி அளவுக்கு மருத்துவ செலவு மிச்சப்படும் என்று கணக் கிடப்பட்டுள்ளது. ஆண்கள் பலர் `புராஸ்டேட்’ சுரப்பியில் புற்று நோய் ஏற்ப ட்டு அவதிப்படுகிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் முறையான உறவை கடைப்பிடித்தால் புராஸ் டேட் புற்று நோயில் இருந்து தப் பி விடலாம். உறவானது மனிதர் களின் வாழ்க்கைத் தரத்தை அதி கரிக்கிறது. இதில் கிடைக்கும் திருப்தி அவர்களை வாழ்வில் முன்னேற்றம் அடையச் செய்கிற து. எந்த தொழிலில் ஈடுபட்டாலும் அதில் முழு ஈடுபாட்டுட ன் இருக்க வைக்கிறது.
தெளிவான முடிவை எடுத்து வெற்றிச் சிகரங்களை தொட வைத்து விடுகிறது. ஊனமுற் றோரின் வாழ்விலும் ஏற்றத் தை ஏற்படுத்துகிறது. அவர்க ளுக்கு இது புதுதெம்பு, உற்சா கத்தை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு சில நா டுகளில் பல்வேறு நோய்களின் பாதிப்பால் தொழிலாளர்கள், ஊழியர்கள், அடிக்கடி `லீவு’ எடு ப்பார்கள்.
இதனால் தொழில்கள் கடும் பாதிப்படையும். ஆனால் முறை யான உறவை கடைப்பிடித் தால் அவர்கள் நோயின்றி வாழ முடியும். இதனால் அவ ர்கள் லீவு எடுப்பது குறைவ தால் ஆண்டு ரூ.1000 கோடி வரை மிச்சமாகும்.
மாரடைப்பை தடுக்கும்:
45 முதல் 59 வயது வரையான ஆண்-பெண்கள் முறையான உறவில் ஈடுபட்டால் டிஎச்இஏ ஹார்மோன் உடலில் அதிக அளவில்சுரக்கும். டெஸ்ட்டோஸ்டிரான் ஹார்மோனும் அதிகரிக்கும் இவை இரண்டும் இதய தசைகளைவலுப்படுத்தி மாரடை ப்பு வராமல் தடுத்துவிடுகிறது.
இந்த ஹார்மோன்கள் இதயத்தி ற்கு நல்ல பாதுகாப்பு அரணாக வும் திகழ்கிறது. இதுபற்றி சமீபத் தில் 918 ஜோடிகளிடம் ஆய்வு மே ற்கொள்ளப்பட்டது. அப்போது உறவில் ஈடுபடு வோரின் இத யம் பலமாக இருப்பது தெரியவந்தது. மாரடைப்பு ஏற்படாத அளவுக்கு அவர்களது இத யம் சிறந்த முறையில் இ யங்கியது தெரிய வந்தது.
`மாத கணக்கில் உறவில் ஈடுபடாமல் இருப்பவர்க ளுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம். முறை யான உறவில் ஈடுபட்டால் நம் நாட்டில் ரூ.100 கோடி அளவு க்கு இதய நோய் சிகிச்சைக்கான செலவு மிச்சமாகும்.

இளமையுடன் ஜொலிக்க…
ஆண்-பெண் இருவரும் முறை யான உறவு மேற்கொண்டால் அவர்களது நரம்பு பலம் அடை யும். உடலில் ரத்தஓட்டம் சீராக இருக்கும். முகத்தில் ஒருவித மினுமினுப்பு ஏற்படும். 10 ஆண்டுகள் வரை இளமையாக தோன்றுவார்கள்.
ஆனால் உறவில் சரிவர ஆர் வம் இல்லாமல் இருப்பவர்க ள் நாள் முழுவதும் கவலை யில் மூழ்கி வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் முகம் வெகு சீக்கிரத்திலேயே முதிர் ச்சி அடைந்து விடும். இதனா ல் தான் சிலர் 50 வயதிலேயே வயதானவர்கள் போல் `ஆகி’ விடுகி றார்கள்.
கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:
நம் நாட்டில் ஏராளமான பேர் இடுப்பு தசைபிடிப்பா ல் கடுமையாக அவதிப்பட் டு வருகிறார்கள். ஆண்-பெ ண் இருவரும் வாரம் 2 மு றை உறவில் ஈடுபட்டால் இடுப்பு பலப்படும். தசைப் பிடிப்பு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.
பெண்களின் கருப்பைகீழ் இறங்குவதும் தடுக்கப்பட்டுவிடும். சிலபெண்களுக்கு பேசும்போது , இருமும் போதும், சிறுசீர் கசியும். முறையான உறவு மூலம் இந்த பிரச்சினைக்கு உடனடியாக முற் றுப்புள்ளி வைத்துவிடலாம். குழ ந்தை குறிப்பிட்டகாலத்திற்குமுன் பே பிறப்பது தடுக்கப்பட்டு விடும்.
மன அழுத்தம் நீங்கும்:

நம் நாட்டைப் பொறுத்த வரையில் தம்பதி இடை யே குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அந்த உறவுகள் சரி இல்லாததால் அடி க்கடி சண்டை சச்சரவு ஏற்படு கிறது. காரணம் அதில் ஈடுபடும்போது மன அழுத்தம், கவலை, வெகுவாக குறையு ம்.
இதனால் வாழ்வில் ஒரு வித நிம்மதி ஏற்படுவதா ல் குழப்பம் நீங்கும். தற் கொலை எண்ணம் மன தில் சுத்தமாகவராது. எந் த வேலையையும் முழு ஈடுபட்டுடன் செய்ய முடி யும். சிலர் தூக்கமின்மை க்காக மாத்திரை பயன்ப டுத்துகிறார்கள். இந்த தூக்க மாத்திரைக்காக செய்யப்படும் செலவு குறைக்க ப்பட்டால் நம் நாட்டிற்கு ரூ. 100 கோடி வரை மிச்சமாகும்.
விவாகரத்து குறையும்:
தம்பதி இடையே உறவு சீராக இருந் தால் கருத்து வேறுபாடு அடியோடு குறையும். ஒருவருக்கொருவர் விட் டுக் கொடுத்து செல்லும் மனப்பக்கு வம் வளரும். சகிப்புத்தன்மை தானா கவே வந்து அவர்களை குதூகலம் அடையச் செய்யும்.
சின்னச்சின்ன பிரச்சினை களுக்கும் பொங்கி எழும் பெண்கள் கப்-சிப்பாகி விடுவார்கள். கோபத்தை அதிகப்படுத்தும் சுரப்பிக ளை உறவானது வெகுவா க குறைப்பதுதான் கார ணம். எனவே தம்பதியர் உறவை சீர்குலையாமல் பார்த்துக் கொண்டால்எக்காரணத்தை கொண்டும் விவாக ரத்து ஏணியில் ஏற மா ட்டார்க்ள.
இந்த விவாகரத்து குறைந்தால் நம் நா ட்டுக்குரூ.300 கோடிவரை மிச்சமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது என்று