horse

horse

Tuesday, February 24, 2015

உங்களுக்கு அடிக்கடி தொண்டை கரகரப்பு ஏற்படுதா


பெரும்பாலும் தொண்டை கரகரப்பு ஏற்பட காரணமாய் இருப்பது புகைப்பிடிக்கும் பழக்கம் அல்லது புகை சார்ந்த இடங்களில் வேலை பார்ப்பது, அதிக சத்தமாய் கத்திப் பேசுவது போன்றவையாக தான் இருக்கும். மேலும் தொண்டை கரகரப்புக்கு அழற்சிகளும் காரணமாக இருக்கும். தொண்டை கரகரப்பு ஏற்படும் போது சில சமயங்களில் சிலருக்கு நெஞ்செரிச்சலும் சேர்ந்து ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொண்டை கரகப்பு என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒரு சாதாரணப் பிரச்சனை
தான். இது ஒரு வாரம் நீடிப்பதே அதிகம். அதற்குள் சரியாகி விடும். ஒரு வேலை உங்களுக்கு தொண்டை கரகரப்பு நெடுநாட்கள் நீடித்து வந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசிக்கவும். ஏனெனில், தொண்டை கரகரப்புப் புற்றுநோய்க்கான ஒரு அறிகுறி என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். நாம் முன்பு சொன்னது போல தொண்டை கரகரப்பைப் பல சமயங்களில் நாமே நமக்கு பரிசளித்துக் கொள்ளும் பிரச்சனையாக தான் வருகிறது, சத்தமாக கத்தி பேசுதல், புகைத்தல் போன்றவையின் மூலம். சரி, தொண்டை கரகரப்பு வராமல் தடுப்பது எப்படி என்பதனைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்… தினமும் ஆறு முதல் எட்டு டம்ளர் வரை தண்ணீர் பருகி வந்தால், தொண்டையில் உராய்வு தன்மை ஏற்படாமல் இருக்கும். உராய்வு தன்மையைக் கட்டுப்படுத்தினாலே தொண்டை கரகரப்பு வராமல் தடுத்துவிடலாம். பெரும்பாலும் வாய் வழியில் சுவாசிப்பதை தவிர்த்து நாசி வழியாக சுவாசிப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் வாய் வழியாக சுவாசிக்கும் போது கிருமிகள் அதிகம் தொண்டைப் பகுதியை கடந்து கல்லீரலுக்கு செல்வதால். இது உங்களுக்கு தொண்டை கரகரப்பை பரிசளிக்க பெருமளவு வாய்ப்புகள் உள்ளன. முடிந்த வரை உங்களது உணவுப் பழக்கத்தில் மென்மையான உணவுகளையும், எளிதாக விழுங்கக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வதும் தொண்டை கரகரப்பு வராமல் தடுக்கும். புகைப்பதன் மூலம் அது நமது தொண்டைப் பகுதியை வறட்சி அடைய செய்கிறது. இதனால், நாம் சாதாரணமாகப் பேசும் போது கூட, தொண்டையில் உராய்வு தன்மை ஏற்படுகிறது. இதனால், சுலபமாக தொண்டை கரகரப்பு ஏற்பட வாய்புகள் உள்ளன. நாம் உபயோகப்படுத்தும் சில வாய் கொப்பளிப்பு திரவங்களில் இருக்கும் கேடு விளைவிக்கும் இரசாயன கலப்புகள் கூட தொண்டை கரகரப்பை ஏற்படுத்தும். தொண்டைப் பகுதி மிகவும் மென்மையான பகுதியாகும். எனவே, நாம் காரமான உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்த்தாலே தொண்டை கரகரப்பு பிரச்சனை வராது பார்த்துக் கொள்ளலாம் அதிகம் மது அருந்துதலின் காரணமாகவும் தொண்டை கரகரப்பு பிரச்சனை ஏற்படுவதாக பல மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதிகம் டைல்யூட் செய்யப்படாத சிட்ரஸ் ஜூஸ் குடிப்பதன் மூலமாகவும் தொண்டை கரகரப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில், அதில் இருக்கும் அசிடிக் தன்மைத் தொண்டைப் பகுதியை எரிச்சல் அடையச் செய்யும். இதனாலும் தொண்டை கரகரப்பு ஏற்பட அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளன. பல நேரங்களில் கிசுக்கிசு பேசும் போதும், புரளி பேசும் போது, நாம் ஹஸ்கி வாய்ஸ் உபயோகப்படுத்துவது உண்டு. அப்போது நம் குரல் வளத்தில் ஏற்படும் கடினத் தன்மையின் காரணமாகவும் கூட தொண்டை கரகரப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது. பசும்பாலில் மிளகை நன்குப் பொடி செய்து அத்துடன் சிறிதளவு மஞ்சள் தூளையும் சேர்த்துப் பருகினால் தொண்டை கரகரப்பிலிருந்து விடுபடலாம்.

Monday, February 16, 2015

நகம்

 

மனிதருக்கு இருக்கும் பழக்கங்களிலேயே, நகம் கடிக்கும் பழக்கம் மிகவும் மோசமான ஒன்று! காரணம், நகம் கடிக்கும் பழக்கம், பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்!
பொதுவாக, நகம் கடிப்பவர்களின் விரல் நுனிகள், மொட்டையானது போன்ற ஒருவித அருவருப்பான தோற்றத்தில் இருக்கும். மேலும், நகம் கடித்ததால், விரல் நுனிகளில் காயங்களும் இருக்கும். இந்த பழக்கத்தால், நகம் பாதிக்கப்படுவதோடு, நகத்தை சுற்றியுள்ள சருமமும் மிகவும் பாதிக்கப்படும். எப்போதும், வாயில் கையை வைத்தவாறு இருப்பதால், அப்பகுதியில் உள்ள சருமமானது நன்கு ஊறி, அங்கு தோல் உரிய ஆரம்பிக்கும். இதனால், அவ்விடத்தில் ரத்தக்கசிவு மற்றும் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பும் உண்டு!
இது ஒருபுறம் இருக்க, நகம் கடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், அந்த நகங்களை பல சமயங்களில் விழுங்கி விடுகின்றனர். இப்படி விழுங்கப்படும் நகங்கள், செரிக்கப்படாமல், வயிற்றில் அப்படியே தங்கி, செரிமான மண்டலத்தில் பெரும் பிரச்னையை உண்டாக்கும். மேலும், கண்ட கண்ட இடங்களில் கைகளை வைத்து விட்டு, ஏதேனும் யோசனையில் இருக்கும்போதோ, அல்லது பதற்றமாக இருக்கும் போதோ, அப்படியே விரலை வாயில் வைத்து நகம் கடிப்பது, பல்வேறு கிருமிகள் வயிற்றுக்குள் செல்வதற்கு வழிவகுக்கும்.
மேலும், பற்களால் நகங்களை கடிக்கும் போது, பற்களின், ‘எனாமல்’ பாதிக்கப்பட்டு, பற்கள் வலிமை இழக்கும். குழந்தைகளை பொறுத்தவரை, இளம்வயதில் இப்பழக்கம் இருந்தால், முன் பற்கள் தாறுமாறாக முளைக்கவும், தெற்றுப்பல்லாக மாறவும் வாய்ப்புண்டு. மொத்தத்தில், நகம் கடிக்கும் பழக்கம், உடல்நலத்திற்கு உகந்ததல்ல!

Wednesday, February 11, 2015

அம்மாக்கள் எடை குறைக்க…


குழந்தைப்பேறுக்குப் பிறகு பெண்களுக்கு உடல் எடை அதிகரித்துவிடுகிறது. பெரும்பாலானோர் சிசேரியன் அறுவைசிகிச்சை செய்திருப்பதால், கடினமான  உடற்பயிற்சிகளைச் செய்யத் தயங்குவர். கவலை வேண்டாம்… சின்னச்சின்னப் பயிற்சிகள் மூலமே, எடையைக் குறைக்க முடியும்.
பர்பீஸ் (Burpees)
கால் முட்டி தரையில் படாதபடி, பாதம் மற்றும் கை விரல்களைத் தரையில் ஊன்றியபடி இருக்கவும். இப்போது ஒரு கையால் உடலைத் தாங்கியடி, மற்றொரு கையை முன்னோக்கிக் கொண்டுசென்று தரையில் பதிக்கவும். பிறகு, மற்றொரு கையையும் முன்னே கொண்டுசென்று தரையில் ஊன்றவும். பிறகு, கால்களைப் பின்னே நீட்டவும். உடல் தரையில் படக் கூடாது. ஓரிரு விநாடிகளுக்குப் பிறகு, பழைய நிலைக்குச் சென்று, மெதுவாக கால்விரல்கள் மற்றும் முன்னம் பாதங்களில் எழுந்து நின்று, கைகளை உயர்த்தி இறக்கவும். ஒவ்வொரு பயிற்சியையும் மூன்று செட்களாகப் பிரித்து, ஒவ்வொரு செட்டுக்கும் 10 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: உடல் எடையைக் குறைக்க உதவும். இதயத் துடிப்பு சீராக இருக்க உதவும். நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கும்.
மவுன்டைய்ன் கிளைம்பர்ஸ் (Mountain climbers)
தரையில் உடல் படாதபடி கால் விரல்களாலும், உள்ளங்கையாலும் ஊன்றியபடி, உடலை உயர்த்தவும். மலை ஏறுவது போல, வலது காலை மட்டும் முன்னே கொண்டுசெல்லவும், பிறகு, பழைய நிலைக்குத் திரும்பிய பின், இடது காலைக்கொண்டு இதே போல செய்யவும். இப்படி 10 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: தொடைத் தசை குறையும், இதயத் துடிப்பைச் சீராக்கும்.
பிளாங்க்ஸ் (Planks)
தரையில் குப்புறப் படுக்கவும். இப்போது, பாத விரல்கள் மற்றும் முழங்கையால் தாங்கியபடி, உடலை உயர்த்தவும். ஒரு சில விநாடிகள் அப்படியே இருந்துவிட்டு, இயல்பு நிலைக்குத் திரும்பவும். இதை 5 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும்.
சிசர் கிக் (Scissor kick)
மல்லாக்கப் படுத்துக்கொள்ளவும். கைகள் உடலுக்கு அருகில் இருக்கட்டும். கால்களை 20 டிகிரிக்கு உயர்த்தவும். இப்போது, ஒரு காலை மட்டும் முடிந்த வரை மேலே உயர்த்தி, இறக்கவும். பிறகு, அடுத்த காலுக்கும் இதே போல செய்யவும். இது போல 10 முறை செய்வது ஒரு செட். இப்படி மூன்று செட்கள் செய்யலாம்.
பலன்கள்: தொடை மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்புகள் கரைந்து, ஃபிட்டாக வைத்திருக்க உதவும்.
பாடி வெயிட் ஸ்க்வாட் (Body weight squat)
கால்களை அகட்டி நேராக நிற்கவும். கைகளை  மடக்கித் தலையின் பின்புறம் வைத்துக்கொள்ளவும். இப்போது, நாற்காலியில் உட்காருவதுபோல அமர்ந்து, எழவும்.  முடியாதவர்கள் சுவரை பேலன்ஸ் செய்தபடி முயற்சிக்கலாம். இப்படி பத்து முறை செய்யவும்.
பலன்கள்: மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மூட்டு வலி, முதுகு வலி, கழுத்து வலி வரவே வராது.

Monday, February 9, 2015

புற்றுநோய்


1புற்றுநோய் உருவாவது எப்படி?
உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் விபரீத மாற்றமே புற்றுநோய். நம் உடலில் இருக்கும் எல்லா உறுப்புகளிலும், வயதான மற்றும் சேதமடைந்த செல்கள் மறைவதும், அவற்றின் இடத்தை புதிய செல்கள் வளர்ந்து நிரப்புவதும், இயல்பாக தொடர்ந்து நடக்கும் செயல். இந்நிலையில், சில செல்களில் மட்டும் ஏற்படும் விபரீதமான மரபணு மாற்றம், புற்று நோய்க்கு காரணமான செல்களாக உருமாறி விடுகிறது.

2மரபணு காரணமாக ஏற்படும் புற்றுநோய்கள் எவை?
மூளை புற்று, சிறுகுடல் புற்று, கணைய புற்று மற்றும் எலும்பு புற்று நோய்கள், மரபணு மாற்றங்களால் ஏற்படுகின்றன.

3நமது வாழ்க்கை முறை புற்றுநோய்க்கு காரணமாகுமா?
கண்டிப்பாக! சூரிய ஒளி அதீதமாக தீண்டும் போது, ஒருவகை தோல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. புகைப்பழக்கம், நுரையீரல் புற்றுநோயை தூண்டும். மோசமான உணவுப்பழக்கம், ஆசனவாயின் மேற்பகுதியில், குதப் புற்றுநோயை உருவாக்கும்!

4புற்றுநோயின் வகைகள் என்னென்ன?
வாய்ப்புற்று, நுரையீரல் புற்று, கர்ப்பப்பை புற்று, கர்ப்பப்பை வாய் புற்று, தொண்டைப் புற்று, ரத்தப் புற்று, எலும்புப் புற்று, மார்பகப் புற்று, குதப் புற்று, கணைய புற்று, தோல் புற்று உள்ளிட்டவையுடன், புற்றுநோயின் பட்டியல் வெகு நீளம்!

5புற்றுநோய் தீண்டியதற்கான அறிகுறிகள்?
உடலின் எந்த பகுதியையும் இந்நோய் தாக்கும். எந்த இடத்தை தாக்குகிறதோ, அதைப் பொறுத்துதான், அறிகுறிகள்! குணமாகாத புண், ரத்த வாந்தி அல்லது புறவழி ரத்தப்போக்கு, சளியில் ரத்தம் வெளிப்படுதல், கட்டி பெரிதாகிக் கொண்டே இருத்தல், மச்சத்தில் அரிப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படுதல், கழுத்துப் பகுதியில் ஏற்படும் வலியற்ற வீக்கம், திடீரென ஏற்படும் எடை குறைவு, காய்ச்சல் உள்ளிட்டவை பொதுவான அறிகுறிகள்!

6புற்றுநோய்க்கென்று ஏதேனும் தடுப்பூசிகள் உள்ளனவா?
‘ஹியூமன் பாப்பிலமோ வைரஸ்’ மூலம் கர்ப்பப்பை புற்றுநோய், மற்றும் ஆண்குறி புற்றுநோய் ஏற்படுகிறது. இவைகளை தடுப்பதற்கு மட்டும் மருந்துகள் உள்ளன.

7புற்றுநோயை குணப்படுத்த, அறுவை சிகிச்சைதான் தீர்வா?

கிட்டத்தட்ட அப்படித்தான்! 30, 40 வருடங்களுக்கு முன், புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை என்பது சிரமமான ஒன்று; தற்போது, நவீன அறுவை சிகிச்சை முறைகளும், கருவிகளும் வந்துவிட்டன. மருத்துவ நிபுணர்களும், உருவாகிக் கொண்டிருக்கின்றனர். இதனால், எளிதாக அறுவை சிகிச்சை முடித்து, நோயாளியை குணப்படுத்த முடியும்.

8புற்றுநோய்க்கான சிகிச்சைகள் என்னென்ன?
நோயின் தாக்கத்தைப் பொறுத்து அல்லது நோய் தாக்கிய உறுப்புகளைப் பொறுத்து… அறுவை சிகிச்சை, மருந்துகளை உட்கொள்ளும் கீமோதெரபி, ரேடியேஷன் எனப்படும் கதிர்வீச்சு முறை என, மூன்றுவிதமான சிகிச்சைகள் கையாளப்படுகின்றன.

9புற்றுநோய் தாக்கி இருப்பதை, உறுதிப்படுத்தும் பரிசோதனைகள் என்னென்ன?
புற்றுநோய் இருப்பதை மேமோகிராபி, பயாப்சி மூலம் தெரிந்து கொள்ளலாம். ரத்தப் புற்றுநோய் இருப்பதை, ரத்த பரிசோதனைகள் உறுதி செய்யும். ரத்தப் புற்றுநோய் தவிர, இதர புற்றுநோய்களை, ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால், குணப்படுத்துவது எளிது என்பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும்!

10குழந்தைகளை புற்றுநோய் தாக்குமா?
ரத்தப்புற்று மற்றும் மூளைப் புற்று குழந்தைகளையும் தாக்கும். மேற்கத்திய நாடுகளில், சில வகையான புற்றுநோய்கள், குழந்தைகளை 14 சதவீதம் பாதிக்கிறது. ஆனால், நம் நாட்டில் 2 முதல் 3 சதவீதம் மட்டுமே தாக்குகிறது.

Saturday, February 7, 2015

குழந்தையின் தொப்புள் கொடி



தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பாலமாக செயல் பட்டு உணவு மற்றும் உணர்வுகளை பகிரும் ஒரு அற்புதமான அமைப்பே தொப்புள் கொடி. இந்த தொப்புள் கொடியில்
மூன்று இரத்த குழாய்கள் இருக்கும். அதில் 2 தமனிகளும், 1 சிரைகளும் ஆகும். ஒருவேளை குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு இருந்தாலோ அல்லது இதய நோய் இருந்தாலோ, ஒரே ஒரு இரத்தக்குழாய் மட்டும் தெரியும். இத்தகைய தொப்புள் கொடியானது குழந்தை பிறந்த பின்னர் வெட்டப்படும். அப்படி வெட்டிய பின்னர் பலருக்கு குழந்தையை குளிப்பாட்டலாமா என்ற சந்தேகம் எழும். பொதுவாக குழந்தை பிறந்து குளிப் பாட்டிய பின்னரே தாயிடம் கொடுப்பார்கள். எனவே குளிப்பாட்ட பய ப்பட வேண்டாம்.
மேலும் குழந்தையின் தொப்புள் கொடியைமிகவும் கவனமாக,அது உதிரும் வரை பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் 10-15 நாட்க ளுக்குள் தொப்புள் கொடியானது உலர்ந்து உதிர்ந்து விடும்.இல்லாவிட்டால், குழந்தைக்கு ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். ஆகவே குழந்தையின் தொப்புள் கொடியை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். இங்கு குழந்தையின் தொப்புள் கொடியை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் பராமரிக்க சில டிப்ஸ் கொடுக் கப்பட்டுள்ளது. புதிய தாய்மார்கள் இத னைப் படித்து தெரிந்து கொ ள்ளுங்கள்.
காலநிலை மாற்றங்கள்
தொப்புள் கொடியானது கால நிலை மாற்றங்களைப் பொறுத்து அது உலர்ந்து உதிர்வது உள்ளது. அதிலும் குளிர் அல்லது மழைக்காலத்தில் தொப்புள் கொடியை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவ்விடத்தில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் வளர்ந்து, குழந்தைக்கு கடுமையான நோய்த்தொற்றை ஏற்படுத்தும்.
அம்மாக்களின் கவனத்திற்கு…
தாய்மார்கள் குழந்தைகளின் தொப்புள் கொடியை சுத்தம் செய்யும் முன்னர், தங்களை கைகள் நன்கு சோப்பு போட்டு கழுவிக் கொள்ள வேண்டும்.இது தொப்புள்கொடி யை சுத்தம் செய்யும்போது மட்டுமின்றி, குழந்தையை தூக்கும் போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
டயப்பர் போடும் போது…
குழந்தைகளுக்கு டயப்பர் போடும் போது கவனமாக இருக்க வேண்டும். அதிலும் டயப்பரை போடும் போது, தொப்புள் கொடியை மறைக்கும் வண்ணம் டயப்பரை அணிவிக்க வேண்டாம்.
குழந்தைக்கு பயன்படுத்தும் துணி …
குழந்தைக்கு பயன்படுத்தும் துணி காட்டனாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள் . மேலும் காட்டன் துணிகொண்டு குழந்தையின் தொப்புள்கொடியை மறைத்தவாறு வைத்துக் கொள்ளுங்கள். இதனால் காற்றின்மூலம் நோய்த்தொற்று  தாக்குவதைத் தடுக்கலாம். மேலும் அவ்விடத்தில் ஈரப்பசை இருந்தால், அதனை காட்டன் துணிகள் உறிஞ்சிவிடும்.

டயப்பர் மாற்றும் போது…
குழந்தைகள் டயப்பரில் சிறு நீர் கழித்தாலோ அல்லது மலம் கழித்தாலோ, உடனே அதனை மாற்றிவிடவேண்டும். இல்லாவிட்டால், அதன்மூலம் குழந்தைகளுக்கு அவ்விடத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.

குளிப்பாட்டும் போது…
குழந்தைக்கு குளிப்பாட்டும் போது, தொப்புள் கொடியில் சிறிது தேங்காய் எண்ணெய் வைத்துக் கொண்டு குளிப்பாட்ட வேண்டும். இதனால் குழந்தையின் தொப்புள் கொடியில் ஈரப்பசையினால் சீழ் கட்டுவதைத் தடுக்கலாம்.