horse

horse

Thursday, April 30, 2015

நோய்களின் நெருங்கிய‌ நண்பன் _____’ஊறுகாய்’



ஊறுகாய் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்
ஊறுகாயை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடலில் பல்வேறு
பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
பலருக்கும் ஊறுகாய் இல்லாமல் உணவு சாப்பி டுவது என்பது கடின மான விடயமாக இருக்கும். அனைவராலும் ருசித்து சாப்பிடப்படும் இந்த ஊறுகாய் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
Normal Pressure
இரத்த அழுத்தம்
உணவோடு அதிகமாக ஊறுகாயை சேர்த்து சாப்பிடும் போதும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். பொதுவாக இரத்த கொதிப்பு உள்ளவர்களில் சிலர் இதை உணர்ந்தி ருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
சிறுநீரக குறைபாடு
ஊறுகாயை அதிகம் சேர்த்துக்கொள்வதனால், சிறு நீரகத்தின் வேலை பளு அதிகமாகிறது. இதனால் சிறுநீரகத்தின் செயல்திறனில் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது.
புற்றுநோய்
ஊறுகாயின் சுவைக்காகவும், பதப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக் க கூடியவை.
புற்றுநோயால் இறந்தவர்களில் 90%க்கும் மேலானவர்கள் தொடர்ச்சியாக அதிகம் ஊறு காய் சாப்பிட்டு வந்தவர்கள் என்று ஓர் ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.
வயிற்றுப்புண்
அதிகமாக ஊறுகாய் சாப்பிடுபவர்களுக்கு முதல் பக்க விளைவாக வயிற்று புண் ஏற்படும். இந்த வயிற்று புண் நாளடைவில் புற்று நோயாக மாற வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
குமட்டல்
அதிகமாக உணவு சாப்பிட்ட பின்னர் பலருக்கும் குமட்டல் போன்றஉணர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால், இதற்குஊறுகாய் தான் காரணம் என்று தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
அதிகமாக சாப்பாட்டோடு சேர்த்துஊறுகாயும் சாப்பி டும் போது குமட்டல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மன அழுத்தம்
ஊறுகாயை அளவிற்கு அதிகமாய் சாப்பிடுபவர்களுக்கு கோபம் காரணத்தினால் ஏற்படும் மன அழுத்தம் அதிகமாய் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தொற்று நோய்
ஊறுகாய் அதிகம்சாப்பிடுபவர்களுக்கு மற்றவர்களை விட எளிதாக நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
செரிமான பிரச்சனை
ஊறுகாயை அதிகமாக சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
ஊறுகாய் மட்டுமல்ல, எந்த ஒரு உணவையும் அளவிற்கு மீறி அதிகமாக உட்கொண்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

Monday, April 20, 2015

பற்களுக்கு போடும் கிளிப்


வளரும் குழந்தைகளுக்கு பால் பற்கள் அனைத்தும் விழுந்து, பின் நிலை யான பற்கள் முளைக்கும் அந்த‌
நேரத்திலேயே தேவைப்படலாம். சிலருக்கு அதற்கு முன் பாகவே செய்ய வேண்டியிருக்கலாம். முன்பக்கமாக போடுவதால் முக அழகு குறையும் என்றுநினைப்பவர்களுக்கு, மறைவாக பல்லுக்கு பின்பக்கமாகவும் போடக்கூடிய கிளிப் வகைகள் வந்துவிட்டன.  அதாவது பற்கள் தூக்கலாகவோ, உள்ளடங்கியோ, முன்னும் பின்னுமாகவோ இருந்தால் கிளி ப் போட்டு சரி செய்யலாம். கிளிப் போடுவது என்பது பற்களின் அமைப்பில் உள்ள பிரச்னையைப் பொருத்தது.
யாருக்கு எந்த மாதிரியான கிளிப் போடலாம் என்ப து அவரது பற்களைப் பரிசோதித்த பின்னரே தெரிய வரும். கிளிப் அணிந்திருக்கும் காலத்தில் பற்கள் பராமரிப்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கிளிப் இடுக்கு களில் உணவுத் துகள்கள் தங்க வாய் ப்புண்டு. இதற்கென உள்ள பிரத்யேக பிரஷ் கொண்டு துணுக்குகளை அகற்றவேண்டும்.
கிளிப் போடும் சிகிச்சை முடிய ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகலாம். கிளிப் போட்டபிறகு நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு ஒரு முறை டாக்டரை சென்று சந்திக்கவேண்டும். அவரது ஆலோசனைப்படி, உணவுகளை எடு த்துக்கொள்ள வேண்டும்.
தாடையின் அளவு சிலருக்கு அதிகமாகஇருந்தால், முதலில் அதை சரி செய்ய வே ண்டும். பிறகு, அறுவைசிகிச்சை தேவைப்பட்டால், பல் மற்றும் தாடையின் அளவை எக்ஸ்ரேமூலம்  கண்டறிந்து, அதற்கேற்ப பல் மருத்துவரால் முடிவு செய்யப்படும்.

Monday, April 13, 2015

பருவை அப்படியே விடு, கிள்ளினால் வரும் வடு!

Posted By Muthukumar.On April 13,2015

முகப்பருக்களால் ஆண்களும், பெண்களும் படும் அவஸ்தைக்கு அளவே இல்லை. அதை போக்க வழி தெரியாமல் சிரமப்படுகின்றனர். அதுவும், பருக்கள் ஏற்படுத்திச் சென்ற வடுக்களை போக்க, இளம் வயதினர் படும் பாடு சிறிதல்ல. பரு வந்தால் சிறிது நாட்களில் போய் விடும். "டிவி’ பார்க்கும் போது அதை நகத்தால் கிள்ளி பாடாய்படுத்துவதால், வடுக்களை நிரந்தரமாக விட்டுச் செல்கிறது. சிறிது நாட்களில் தானாக மறையும் பருவை கிள்ளாமல் இருந்தால், வாழ்நாள் முழுவதும் முகம் பளிச்சென்று இருக்கும்.
சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் பாக்டீரியாக்கள் தாக்கும்போது முகப்பருக்கள் வருகின்றன. இயற்கையான முறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு முகப்பருவை போக்க முடியும். குறிப்பாக, சுத்தமான தேனை பயன்படுத்தி முகப்பருக்களைப் போக்கலாம் என்பது தெரியுமா?
கற்றாழை மற்றும் தேன் மாஸ்க்: கற்றாழையுடன், தேன் கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், முகப்பருக்களை தடுக்கலாம். அவகேடோவில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. குறிப்பாக, சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு இந்த பழம் மிகவும் நல்லது.
சர்க்கரை மற்றும் தேன்: சர்க்கரையுடன் தேன் கலந்து, முகத்தை மென்மையாக ஸ்கிரப் செய்தால், சருமத்துளைகளில் உள்ள அடைப்புகள் மற்றும் அழுக்குகள் முற்றிலும் நீங்கி, எண்ணெய் பசையின் சுரப்பும் குறைந்து, பருக்கள் வருவது தடுக்கப்படும்.
ஓட்ஸ் மற்றும் தேன் மாஸ்க்: ஓட்ஸ், உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. தேனை ஓட்ஸ் பொடியுடன் சேர்த்து, முகத்தில் மாஸ்க் போட்டு வந்தால், அவை பருக்களை போக்குவதோடு, அதனால் ஏற்படும் வடுக்களையும் தடுக்கும்.
ஸ்ட்ராபெர்ரி மற்றும் தேன் மாஸ்க்: ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அதனை கொண்டு சருமத்தைப் பராமரித்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புத்துயிர் பெறும். அதிலும், ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதனுடன் தேன் கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
பால் மற்றும் தேன் மாஸ்க்: பாலுக்கு சருமத்தை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் தன்மை உள்ளது. எனவே தேனுடன் பாலை சிறிது சேர்த்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவினால், பருக்கள் மறையும்.
பட்டை மற்றும் தேன் மாஸ்க்: தேனில் ஆன்டி-பாக்டீரியல் தன்மையும், பட்டையில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மையும் இருப்பதால், இவற்றைக் கொண்டு, முகத்திற்கு மாஸ்க் போட்டால், பருக்கள் மறையும். பட்டை பொடியுடன் தேனை கலந்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவி உலர வைத்து கழுவினால், பருக்கள் காணாமல் போய்விடும். இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது.