horse

horse

Tuesday, September 29, 2015

Lovers Vasiyam,Training Class,Male Female vasiyam,Black Magic

ஆண் பெண் வசியம்,காதலர் வசியம்,குடும்ப தொல்லை நீக்க  ,தெய்வ சக்திகள் பெற,வசிய மை செய்முறை,யந்திரம் எழுதும் முறை,மாந்திரீகம்,தாந்த்ரீகம்,பரிகாரங்கள் , தன வசிய முறை,சொத்து பிரச்சனை,எதிரி தொல்லை நீங்க,பில்லி சூனியம் விலகவும் பயிற்சி அளிக்கப்படும்.
இடம் :சென்னை பல்லாவரம் .நாள் :11.10.2015.காலை  9 முதல்  மாலை 5 வரை.கட்டணம் Rs 4000 மட்டும்.மதிய உணவு,தேநீர் ,கையேடு,பேனா வழங்கப்படும். முன்பதிவுக்கு :8015262015.

     ஸ்ரீகாலபைரவர்பீடம்,,சேலம்.

Monday, August 31, 2015

ரத்த அழுத்தம்


01. ரத்த அழுத்தம் என்றால் என்ன?
உடலில் உள்ள திசுக்களுக்கு தேவையான உணவு, பிராண வாயுவை எப்போதும் கிடைக்கச் செய்யவும்; திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேற்றவும், ஓர் அமைப்பு நம் உடலுக்கு தேவை. அந்த அமைப்பு தான், ரத்த ஓட்டம். அந்த ரத்த ஓட்டம், ஒருவித அழுத்தத்தால் தான், உடல் முழுக்க செல்கிறது. அதைத் தான், ரத்த அழுத்தம் என்கின்றோம். 
02. உயர் ரத்த அழுத்தம் உண்டாவதற்கான காரணங்கள்?எந்த காரணமும் இல்லாத நிலையில், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் அதற்கு, ‘முதல் நிலை உயர் ரத்த அழுத்தம்’ என்று பெயர். இதில், மரபணு சார்ந்த ரத்த அழுத்தமும் அடங்கும். கர்ப்பத் தடை மாத்திரை உட்கொள்ளுதல், வேண்டாத தீய பழக்கங்கள், புகைப் பிடிப்பது, மது அருந்துவது, மன அழுத்தம் போன்ற காரணங்களால் வரும் உயர் ரத்த அழுத்தத்திற்கு, ‘இரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்தம்’ என்று பெயர். 
03. மேற்சொன்ன காரணங்கள் மட்டுமே, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகின்றனவா?
நவீன காலத்தில், டின்னில் அடைத்து விற்கப்படும் உணவுகள், துரித உணவுகளை உண்பது, மிகவும் சாதாரணமாகி விட்டது. இதில், ருசிக்காக அதிகளவு கொழுப்பு பொருட்களும், உப்பும் சேர்க்கப்படுகிறது. இதனால், பெரும்பாலானோருக்கு, இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. 
04. உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் விளைவுகள்?
சிறுநீரகக் கோளாறுகள், ரத்தம் சிறுநீரகங்களுக்குக் குறைவாகச் செல்லுதல், பக்கவாதம், இதயம் தொடர்பான பல்வேறு நோய்கள், ஹார்மோன்களின் அளவு மாறுதல் போன்றவை ஏற்படுகின்றன. 
05. ரத்தத்தில் அதிகமாக உப்பு சேர்ந்தால், ரத்த அழுத்தம் மட்டுமின்றி, சிறுநீரக கோளாறும் ஏற்படுகிறதாமே?
உப்பை அதிகளவில் உட்கொள்வதால், அது ரத்தத்தில் கலக்கிறது. உப்பின் அடர்த்தி நிலையை குறைக்க, ரத்தம், உடலில் உள்ள நீரை அதிகமாக எடுத்துக் கொண்டு, சிறுநீரகம் மூலம் அதை வெளியே தள்ள முயல்கிறது. இதனால், ரத்த அழுத்தம் அதிகமாகி, சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. 
06. ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி உதவுமா?
கண்டிப்பாக உதவும். அதிகாலை நடைபயிற்சி (45 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை), சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தல் நல்லது. யோகாசனம் செய்வது மிகவும் சிறந்தது. இது, மன அழுத்தத்தையும் குறைக்கும் தன்மை கொண்டது. நாள்தோறும் உடற்பயிற்சி செய்தால், 10 மி.மீ., அளவு உயர் ரத்த அழுத்தம் குறையும் என, கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
07. எவ்வாறு நடைபயிற்சி செய்ய வேண்டும்?
மூச்சு இரைக்க நடைபயிற்சி மேற்கொள்ளக் கூடாது. நடையில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்; பாதம் முழுவதும், ஒரே சீராக அழுத்தப்பட வேண்டும். காலை நேரத்தில், வெயிலுக்கு முன் நடப்பது நல்லது. 
08. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க, உணவுக் கட்டுப்பாடு தேவையா?
எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவை உட்கொள்ள வேண்டும்; வயிறு புடைக்க உண்பதை தவிர்ப்பது நல்லது. உண்ட உணவு செரிக்கும் முன்பே, அடுத்த வேளை உணவை எடுத்துக் கொள்வதும்; நீண்ட பட்டினி கிடப்பதும், உயர் ரத்த அழுத்தத்திற்கு வித்திடும். எண்ணெயில் பொரித்த உணவுகள், புளிப்பு பண்டங்கள், மசாலா பொருட்கள், காபி, டீ, பருப்பு வகைகள், மாமிச உணவுகள், வாயுவை பெருக்கும் உணவுப் பொருட்களை குறைத்துக் கொள்ள வேண்டும். 
09. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் பராமரிக்க, என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?
கீரைகள், பழங்கள் போன்றவற்றை, உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, குப்பைமேனி கீரை, முருங்கைக்கீரை, சிறுகீரை போன்றவற்றை சாப்பிட வேண்டும். கறிவேப்பிலையை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. காலை உணவை கண்டிப்பாக தவிர்க்கக் கூடாது.
10. உணவு மாற்றம் மட்டுமல்லாமல், பழக்க வழக்கங்களிலும் மாற்றம் தேவையா?
மன அழுத்தத்தை உண்டாக்கும் கோபம், எரிச்சல், தீரா சிந்தனை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பதை, அறவே தவிர்க்க வேண்டும்; மது அருந்துதல் கூடாது. இப்படி, சிறு சிறு விஷயங்களில் நம்மை மாற்றிக் கொண்டால், ரத்த அழுத்தம் மட்டுமல்ல; நீரிழிவு நோயிலிருந்து கூட நம்மை காத்துக் கொள்ளலாம்.

தூக்கமின்மை தவிர்க்க…


ம்மில் பலர் நள்ளிரவில்தான் உறங்கவே செல்கிறோம். காலை எட்டு மணிக்குக் குறைந்து எழுவது சிரமம். இன்சோம்னியா (Insomnia) எனப்படும் தூக்கமின்மை நோய் நம் சமூகத்தில் மெள்ள அதிகரித்துவருகிறது. தூக்கமின்மைப் பிரச்னையைத் தவிர்க்க எளிமையான எட்டு வழிகளை மேற்கொண்டால் போதும், தூக்கம் சுகமாகும்.
குறித்த நேரத்தில் உறங்குதல்
தினமும் குறித்த நேரத்தில் உறங்கத் தயாராகுங்கள். தூங்கும் நேரத்தை அடிக்கடி மாற்றாமல், எந்த நேரத்தில் தூங்க வேண்டும் என்பதை முடிவுசெய்து, அந்த நேரத்தில் படுக்கைக்குச் சென்றுவிடுங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். ஆனால், குறித்த நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தினால், நம் உடல் மற்றும் மன நலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்கூடாக உணர முடியும். தினமும் ஏழெட்டு மணி நேரம் தடையற்ற உறக்கமும் ஓய்வும் உடலுக்கு அவசியம்.
சீரான உணவு அவசியம்
படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு, உணவை முடித்துவிட வேண்டும். இரவில் உணவை அறவே தவிர்ப்பதும் கூடாது. வயிறு  நிறையச் சாப்பிடுவதும் கூடாது. அதிகம் மசாலா சேர்க்காத, எண்ணெயில் பொரிக்கப்படாத, மைதா சேர்க்கப்படாத உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.
டி.வி பார்த்தல்
படுக்கை அறையில் டி.வியை வைக்க வேண்டாம்.ஹாலில் மட்டும் டி.வி இருக்கட்டும். இரவு வேளையில் மனதை உலுக்கும் திகில் படங்கள், வன்முறை நிறைந்த படங்கள் பார்ப்பதைத் தவிர்த்து, மனதுக்கு இதமான பாடல்கள்,  சிரிக்கவைக்கும் கார்ட்டூன்கள், காமெடி சேனல்கள் போன்றவற்றைப் பார்க்கலாம்.  டி.வி பார்க்கும்போதே தூக்கம் வந்துவிட்டால், டி.வியை அணைத்துவிட்டுப் படுக்கை அறைக்குச் செல்வது நல்லது.
காஃபின் தவிருங்கள்
காபியில் இருக்கும் காஃபின் எனும் வேதிப்பொருள், மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர் களைத் தூண்டிவிடும். இதனால், மூளை சுறுசுறுப்பு அடையும். இரவு நேரத்தில் காபி அருந்துவது உறக்கத்தைப் பாதிக்கும். மாலை 6 மணிக்கு மேல் காபி அருந்துவதைத் தவிர்த்துவிடவும். காஃபின் சேர்க்கப்பட்ட கார்பனேட்டட் குளிர்பானங்கள், சாக்லேட்டுகளைத் தவிர்ப்பதும் நல்லது.
வெளிச்சம் வேண்டாம்
தூக்கத்துக்கு மெலட்டோனின் எனும் ஹார்மோன் சுரப்பு அவசியம். இருட்டான சூழ்நிலையில்தான், இந்த ஹார்மோன் நன்றாகச் சுரக்கும். முடிந்தவரை இரவில் அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டுப் படுங்கள். வெளிச்சம் தேவைப்பட்டால், படுக்கையறையில் மிகவும் மெலிதான வெளிச்சம் தரும் நீல நிற விளக்கைப் பயன்படுத்தலாம்.
படுக்கையறையில் கவனம்
படுக்கை அறையைத் தூங்குவதற்கு ஏற்ற சூழலில் வைத்திருக்கவேண்டும்.  அறையின் வெப்பநிலை, உறக்கத்தைக் குறுக்கிடாதவாறு அமைத்துக்கொள்வது நல்லது. டி.வி, லேப்டாப், டேப்லெட் போன்றவற்றைப் படுக்கையறைக்குள் பயன்படுத்தாதீர்கள்.  படுத்தவுடன், தூக்கம் வரவில்லைஎனில், வேறு அறைக்குச் சென்று பிடித்தமான ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடலாம். நன்றாக உறக்கம் வந்த பிறகு, படுக்கையறைக்கு வந்தால் போதும்.
புகை, மதுவுக்கு நோ
புகை, தூக்கத்தும் பகைதான். சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் தூக்கத்தைத் தொந்தரவு செய்யும். எனவே, புகைபிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். மது அருந்தும்போது, அதில் உள்ள ஆல்கஹால் காரணமாக போதையில் மயக்கம் ஏற்படுமே தவிர, நல்ல தூக்கம் வராது.  மது, மனசுழற்சி கடிகாரத்தைப் பாதிக்கும்.  இதனால், சீரற்ற வளர்ச்சிதை மாற்றம் ஏற்படும். எனவே, மதுவை கட்டாயம் தவிருங்கள்.
சைலன்ட் மோடுக்கு மாறுங்கள்
தூக்கமின்மை அதிகரிப்பதற்கு மிக முக்கியக் காரணம் மொபைல். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இரவில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும். இரவு செல்போன் இல்லாமல் தூங்க முடியவில்லை, காலையில் வாட்ஸ்அப்பில்தான் விழிக்கிறீர்கள் எனில், நீங்கள் மொபைலுக்கு அடிமை என அர்த்தம். தினமும் இரவு ஒன்பது மணிக்குள் பேசவேண்டியவர்களிடம் பேசிவிட்டு, மொபைலை சைலன்ட் மோடில் வைத்துவிடுங்கள். அவசர, அவசியமின்றி இரவில் மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நிம்மதியான உறக்கத்துக்கு நல்ல வழி.
இன்சோம்னியா அறிகுறிகள்
குறித்த நேரத்தில் தூக்கம் வராதது, அடிக்கடி தூக்கத்தைத் தொலைப்பது, தினமும் தூக்கத்தின் இடையே அடிக்கடி விழிப்பது, நன்றாகத் தூங்கிய உணர்வு இல்லாமல் இருப்பது போன்றவை அனைத்தும் இன்சோம்னியாவின் அறிகுறிகள்.  இந்த அறிகுறிகள் இருப்பவர்கள், மருந்தகங்களுக்குச் சென்று, சுயமாக மாத்திரைகள் வாங்கிப் பயன்படுத்துவது ஆபத்தானது. உளவியல் நிபுணர் அல்லது மனநல நிபுணரை சந்தித்து, ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.

Thursday, June 18, 2015

பெண்களை தாக்கும் பிரச்சனைகள்


Posted By Muthukumar,On June 18,2015

ஒரு பெண்ணால் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு குழந்தையை வயிற்றில் நிரந்தரமாக சுமக்க முடியவில்லை என்பதை மலட்டுத் தன்மை என்று 
கூறலாம். அதே போல் 35 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் 6 மாதங்கள் முயன்றும் கர்ப்பமாகவில்லை என்றால், அதையும் கூட மலட்டுத் தன்மை என சொல்லலாம். 

ஒரு பெண் கரு தரித்தாலும் கூட, அவளால் கருவை சுமக்க முடியவில்லை என்றாலும் அதனை மலட்டுத் தன்மை என கூறலாம். மலட்டுத் தன்மை என்றால் பிரச்சனையானது பெண்களிடம் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆண் பெண் என இருவருக்கும் இந்த பிரச்சனை ஏற்படலாம். இப்பிரச்சனை மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஏற்படுகிறது. 

இப்பொழுதெல்லாம் மலட்டுத் தன்மை பிரச்சனை பல பெண்களையும், ஆண்களையும் தாக்குகிறது. அதற்கு காரணம் நாம் வாழும் ஆரோக்கியமற்ற சூழலும், உணவும் என்று கூட சொல்லலாம். மலட்டுத் தன்மை பெண்களிடம் இருந்தால், அதனை கண்டுபிடித்து குணப்படுத்துவது சுலபம். 

அதற்கு காரணம் பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்பட அனைத்து காரணிகளும் பெரும்பாலும் அறியப்பட்டவை தான். கர்ப்பமாக உதவும் அனைத்து உணவுகளையும் உண்ணுங்கள். மேலும் சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதே போல் கருவளம் மேம்பட உணவுகளை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 

மலட்டுத் தன்மை ஏற்படுவதற்கு தோராயமாக 15%-18% காரணமாக இருப்பது குழாயில் நோய்கள் இருப்பதால் தான். ஃபாலோபியன் குழலில் ஏற்படும் அடைப்பு தான் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம். அதற்கு சில சோதனைகள் செய்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வயதுக்கும் மலட்டுத் தன்மைக்கும் நேரடி தொடர்பு உள்ளது. 

உடல் வலிமை, எதிர்ப்பு சக்தி, தடுப்பாற்றல் மற்றும் ஹார்மோன் அளவுகள் எல்லாம் வாலிப வயதில் உச்சத்தில் இருக்கும். அதனால் இதனை முக்கியமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் உடலின் வலிமையானது வயது ஏற ஏற குறையத் தொடங்கும். அதனால் மலட்டுத் தன்மை சம்பந்தமான சிகிச்சையை சீக்கிரம் ஆரம்பிப்பது அவசியம். 

நல்ல தூக்கம் இல்லாமல் போவதற்கும், மலட்டுத் தன்மைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று பல ஆய்வுகள் கூறுகிறது.  இரவு வேளை நீண்ட நேரம் கண் விழித்திருந்தால், ஹார்மோன் அளவுகளில் பல அடிப்படை மாற்றங்கள் ஏற்படும். அதனால் அது மலட்டுத் தன்மையை ஊக்குவிக்கும். 

போதிய தூக்கம் இல்லாமல் இருப்பவர்கள் பல உடல்நல கோளாறுகளை சந்திக்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கணவன் மனைவி உறவுக்கு இடையே இறுக்கம் ஏற்பட்டாலும் கூட, மலட்டுத் தன்மைக்கு முக்கிய காரணமாக அது அமையும். அதனால் கணவன் மனைவி இரண்டு பேரும் பரஸ்பர அன்புடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும். 

அவர்களுக்குள் சண்டையோ எந்த வித உரசலோ இருக்கக் கூடாது. இந்த நேரத்தில் தான் ஒருவருக்கு ஒருவர் உடல், மனம் மற்றும் உணர்ச்சி ரீதியாக ஆதரவாக இருக்க வேண்டும். மற்ற வியாதிகளை போல் மலட்டுத்தன்மையையும் குணப்படுத்த முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இளம் வயதிலும் மார்பக புற்றுநோய்


இளம் வயதினருக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு வருகிறது. ஆரம்பத்தில் கண்டறிந்தால், முற்றிலும் குணப்படுத்தலாம். 40 வயதுக்கு மேலான பெண்கள், ‘மேமோகிராம்’ செய்து கொள்வது அவசியம்; ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரும்’ 
மார்பக புற்றுநோய் பாதிப்பு எந்த அளவில் உள்ளது; அக்டோபரில், பிரத்யேகமாக விழிப்புணர்வு மாதம் கொண்டாடுவது ஏன்?
உலக அளவில், பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில், மார்பக புற்றுநோய் முதல் இடத்தில் உள்ளது. உலகில் ஆண்டுதோறும், 1.4 கோடி பெண்களும், இந்தியாவில், 1.15 லட்சம் பெண்களும், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில், 73 லட்சம் பேரும், இந்திய அளவில், 53 ஆயிரம் பேரும், இதனால் இறக்கின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம். எனவே, அக்டோபர் மாதம், விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப் படுகிறது.
இது பாரம்பரிய நோயா? இதற்கான காரணம் என்ன?
வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், உணவு பழக்கம், உடல் பருமன் அதிகரிப்பு, மரபணு
மாற்றங்கள், குழந்தை பேறு இல்லாமை, 12 வயதுக்கு முன் மாதவிடாய் துவங்குதல், 54 வயதிற்கு பிறகும் மாதவிடாய் நீடிப்பது, கதிர்வீச்சுக்கு உட்படுதல் போன்றவற்றால், மார்பக புற்றுநோய் வருகிறது. குடும்பத்தில், முன்னோரில், ஏதேனும் ஒரு நபருக்கு, இந்த பாதிப்பு இருந்திருந்தால், சந்ததியினருக்கு, 20 சதவீதம் வர வாய்ப்புள்ளது.
எந்த வயதில் நோய் பாதிக்கும்? ஆண்களையும் பாதிக்குமா?
பொதுவாக, 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு வரும். தற்போது, இளம் வயது பெண்களுக்கு, 30 வயதிலும் வருகிறது. ஆண்களுக்கும், ஒரு சதவீதம் மார்பக புற்றுநோய் பாதிப்பு வருகிறது.
அறிகுறிகள் என்ன? வெளிப்படையாக தெரியுமா?
ஆரம்ப நிலையில், எந்த அறிகுறியையும் காட்டு வதில்லை. ஆனால், நோய் பரவ பரவ, மார்பகத்தின் தோற்றம் மாறுபடும்; தொடுதலின்போது வித்தியாசத்தை உணர முடியும். தாக்கம் அதிகரித்தால் மார்பகம், அக்குள்களில் வீக்கம் ஏற்படும். மார்பின் மேல் உள்ள தோலில் மாற்றங்கள் தெரியும்.மார்பக காம்புகளில் சாதாரண திரவம்; ரத்தத்துடன் கூடிய திரவம் கசிதல்; மார்பு காம்புகள் உட்புறமாக திரும்பிக் கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். முற்றிய நிலையில், முதுகு வலி, மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படலாம்.
இதற்கான சிகிச்சை முறைகள் என்ன? முற்றிலும் குணப்படுத்த முடியுமா?
மார்பக புற்றுநோய் கட்டிகளை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம். கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. புற்று நோயை மருந்துகள் மூலம் குணப்படுத்தும் முறையே கீமோதெரபி எனப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின், 21 நாட்களுக்கு ஒருமுறை, ஆறு முதல் எட்டு தவணைகளில், கீமோதெரபி தரப்படும்.முற்றிய நிலை என்றால், மார்பகத்தை அகற்ற வேண்டிய நிலை வரலாம்; அகற்றினால், வேறொரு பகுதியில் இருந்து தசையை எடுத்து வைத்து, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலம், மார்பகத்தை உருவாக்க முடியும்.
மார்பக புற்றுநோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிந்தால், முற்றிலும் குணப்படுத்த முடியும். பாதிப்பில் நான்கு நிலைகள் உள்ளன. முதல் இரண்டு நிலைகளில், 95 சதவீதமும், மூன்றாம் நிலையில், 50 சதவீதமும் காப்பாற்ற முடியும். நான்காம் நிலையில் காப்பாற்றுவது கடினம்; 10 சதவீதம் பேரை குணப்படுத்த வாய்ப்புள்ளது.
கீமோ தெரபியால் பக்க விளைவுகள் அதிகம் என்கிறார்களே?
கீமோ தெரபி கொடுக்கும்போது, வாந்தி, முடி உதிர்தல், அசதி மற்றும் ரத்த அணுக்கள் குறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். வாந்தி, அசதி போன்றவை, ஓரிரு நாட்களில் சரியாகி விடும். கீமோ தெரபி சிகிச்சை முடிந்ததும், உதிர்ந்த முடிகள் தானாக வளர ஆரம்பித்து விடும்; முடியை விட உயிர் முக்கியம் என்பதை உணருங்கள்.

மார்பக சுய பரிசோதனை செய்வது அவசியமா? அதற்கான வழிமுறைகள் என்ன?
 
பொதுவாக, 20 வயதுக்கு மேலான பெண்கள், மாதம் ஒரு முறை, தங்கள் மார்பகங்களை தாங்களே, கையால் அழுத்திப் பார்த்து, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண்ணாடி முன் நின்று, இரண்டு மார்பகமும் தோற்றத்தில் ஒன்றாக உள்ளதா; ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா; சருமத்தில் மாற்றம் உள்ளதா; காம்பு பகுதி உள் இழுக்கப்பட்டுள்ளதா என, பார்க்க வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், உடனே, டாக்டரிடம் செல்வது முக்கியம்.
‘மேமோகிராம்’ என்றால் என்ன?; நவீன சிகிச்சை முறையா?

மார்பகத்தை, ‘எக்ஸ் – ரே’, ‘ஸ்கேன்’ மூலம் பரிசோதிப்பதே, ‘மேமோகிராம்’ எனப்படுகிறது. அறிகுறிகள் ஏதும் தெரியாத நிலையில், இப்பரிசோதனையில், மார்பக புற்றுநோய் பாதிப்பை கண்டறிய முடியும். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்டுக்கு ஒருமுறை, இந்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
ஆண்டுதோறும், டாக்டர்களின் ஆலோசனைப்படி, உடல் நல பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்த உறவுகளில் யாருக்கும் மார்பக புற்று நோய் இருந்தால், தொடர் பரிசோதனை அவசியம். குடும்பத்தில், பலருக்கு புற்றுநோய் இருந்தால், ஒட்டு மொத்த குடும்ப நபர்களும், டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும். கொழுப்பு சத்துள்ள உணவைத் தவிர்ப்பதோடு, உடல் பருமனையும் குறைக்க வேண்டும். காய்கறி, பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மன அழுத்தத்தில் சிக்கி விடக் கூடாது. தியானம், எளிய உடற்பயிற்சிகள்
செய்வதால், பாதிப்பு வராமல் தப்ப முடியும்.

Tuesday, June 9, 2015

அன்னாசிப் பழம்


தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட அன்னாசிப் பழம் உலகம் முழுக்கப் பரவ கப்பல் மாலுமிகள் ஒரு மிகப் பெரிய காரணம். அவர்கள் எங்கு பயணத்தை மேற்கொண்டாலும் வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படக்கூடிய ஸ்கார்வி நோயைத் தவிர்ப்பதற்காக, அன்னாசிப்பழத்தை எடுத்துச்செல்வது வழக்கம். இதில் இருந்தே இந்தப் பழத்தின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம்.
annachi
உடலுக்குத் தேவையான சில குறிப்பிட்ட வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் இதில் நிறைவாகவே உள்ளன. திசுக்கள் வீக்கம் அடைவதைத் தடுக்கிறது. புற்றுநோயை எதிர்க்கும் ரசாயனப் பொருட்கள் உள்ளன. அன்னாசியைத் தொடர்ந்து சாப்பிட்டுவரும்போது எலும்பு தொடர்பான பிரச்னைகள், செரிமானக் குறைவு, குடலில் புழு தொந்தரவு போன்றவை வராமல் தடுக்கும்.
untitled
மாங்கனீஸ் தாதுப்பொருள் இருப்பதால், எலும்பு உறுதித்தன்மைக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் கொழுப்பின் அளவைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும். வைட்டமின் சி நிறைவாக உள்ளதால் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும். குமட்டல், வாந்தியைத் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு மார்னிங் சிக்னஸ் நேரத்தில் இது பெரிதும் உதவியாக இருக்கிறது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வயிறு செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். செரிமானத் திறன் அதிகரிக்கும்.
குறைந்த அளவிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற தொந்தரவு ஏற்படலாம். சிலருக்கு அன்னாசிப்பழம் அலர்ஜியை ஏற்படுத்தும் என்பதால், அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள்  தவிர்ப்பது நல்லது.
பொட்டாசியம் அளவு குறைவு என்பதால் சிறுநீரக செயலிழப்பு பிரச்னை உள்ளவர்கள் இதை ஓரளவுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

மது அருந்துபவர்களுக்கான



மது குடித்தவுடன் அதில் இருக்கும் ஆல்கஹால் ரத்தத்தால் உறிஞ்சப் படுகிறது. மற்ற உணவைப் போல இதை ஜீரணம் செய்ய வேண்டியது இல்லை. எளிதில் ரத்தத்தால் உறி ஞ்சப்படும் ஆல்கஹால் தண்ணீரி லும், கொழுப்பிலும் கரையும் தன் மை கொண்டது.
இதனால் விரைந்து உடல் உறுப்புகளுக்கு செல்கிறது. அதிலும்
அதிக ரத்த நாளங்கள் மற்றும் அதிக நீர்தன்மை கொண்ட மூளைக் கு அதிக அளவு ஆல்கஹால் செல்கிறது. இது போல் கல்லீரலுக்கு செல்லும் ஆல்கஹால் டி ஹைட்ரோ ஜீனேஸ் என்ற என்சைமை சுரக்கிறது. இது ஆல்கஹாலை அசிட்டால்டிஹைட் ஆக மாற்றுகிறது. இது விஷத்தன்மை மிக் கது. இது உடலின் அனைத்து பாகங் களையும் பாதிக்கிறது.
இது மற்றொரு என்சை மான அசிட்டால்டிஹைட் டிஹைட் ரோ ஜீனேசை தூண்டுகிறது. இது விஷத்தன்மை கொண்ட அசிட்டால் டிஹைடை அசிட் டேட் அல்லது அசிட்டிக் ஆசிட் ஆக மாற்றி உட லில் இருந்து வெளி யேற்றுகிறது.
இந்த என்சைம் சுரப்பு குறைவாக இருப்பவர்களின் உடலை விட்டு ஆல்கஹால் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு வன்முறை நடவடிக்கை அதிகரிக்கும். வாந்தியை கட்டுப்படுத்தும் மூளை பகுதி பாதிக்கப்படுவதாலும். விஷத்தன்மை மிக்க அசிட்டால்டிஹைட் மூளை ரத்தத்தில் சுற்றுவதாலும் வாந்தி ஏற்படும்.
மேலும் ஆன்டி டயூரிட்டி ஹார்மோ ன் சுரப்பையும் ஆல்கஹால் பாதிக் கிறது. இதனால் உடலின் நீர் சம நிலை பாதிக்கும். சிறுநீரகம் சிறுநீரி ல் உள்ள அதிகப்படியான தண்ணீ ரை மீண்டும் கிரகிக்க முடியாத நிலை ஏற்படும்.
இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படு ம். இது கழுத்து வலி, முதுகு வலி, தலைவலி போன்றவற்றை உருவா க்கும். ஆல்கஹால் காரணமாக கணயம் அதிக இன்சுலினை சுரக் கும். இதனால் ரத்த சர்க்கரை அளவு திடீரென குறையும்.
இதனால் தலைவலி, வாந்தி ஏற்படும்.ஆல்கஹால் உட்கொள்வதா ல் ரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதனால் இதய கோளாறுகள் ஏற்படும்.மேலும் உடல் வெப்பநிலையும் குறையும்.
குடித்த உடன் பேச்சுக்குளறல், தூக்கம், வாந்தி, பேதி, வயிற்றுக்கோளாறு, தலைவலி, சுவாசக் கோளாறு, காது கேளாமை, முடிவெ டுக்க முடியாமை, சுய நினைவை இழத்தல், ரத்த சோ கை உள்ளி ட்டவை ஏற்படும்.
மேலும் அதிக ரத்த அழுத்தம், ஸ் டோக், இருதய கோளாறு, கல் லீரல் பாதிப்பு, நரம்பு கோளாறு, மூளை பாதிப்பு, குடும்ப வன்மு றை, அல்சர், வாய், தொண்டை கேன்சர் உள்ளிட்டவையும் ஏற்ப டும். இவ்வாறு ஆல்கஹால் செய்யும் கெடுதல்கள் பட்டியல் நீளமா னது. ஆனால் நன்மை எதுவுமே இல்லை.
மதுவுக்கு ஏன் ‘மது’ என்று பெயர் வைத்தார்கள்!
மதுவுக்கு ஏன் ‘மது’ என்று பெயர் வைத்தார்களோ?! ஒருவேளை ‘ம’கிழ்ச்சியில் தொடங்கி ‘து’ன்பத்தில் முடிவதால்கூட இருக்கலாம்.
என்னதான் ‘மது உடலுக்கு கேடு விளைவிக்கும் உயிரைப் பறிக்கும்’என்று மதுக்கடைகள் தொடங்கி சினிமா தியேட்டர் வரை போகிற இடமெல்லாம் எச்சரிக்கை விடுத்தாலும், சிலர் அதையெல்லாம் பொரு ட்படுத்துவதே இல்லை.
மது என்ற விஷயம் குடிப்பவரை மட்டுமல்ல அவரது குடும்பத்தை யும் சேர்த்தே துன்பத்துக்கு ஆளாக் குகிறது.
‘சும்மா ஜாலிக்காக குடிக்கிறேன்’ என்று சொல்பவர்களில் தொடங் கி, ‘விளையாட்டா ஆரம்பிச்சேன். இப்போ விட முடியலை!’ என்று சொல்வர்கள்.
‘இது அழிவை நோக்கிய பயணம்’
மதுவுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டு எடுக்கும் மருத்துவமனையின் குடிநோய் சிறப்பு மருத் துவரிடம் பேசினோம். ” தலைவலி, இருமல், காய்ச்சல் போன்று குடிப்பழக்கமும் ஒருவகை நோய்.
குடிப்பவர்களை இந்த சமூகம் குடிகாரர் களாகப் பார்க்கிறதே தவிர, நோயாளி யாகப் பார்ப்பதில்லை. மதுவைக் குடித் து, அதற்கு அடிமையாவது ஒருவகை நோய். இந்த நோயானது குடிக்கும் எல் லோருக்குமே வருவது கிடையாது. இந்த நோய்க்கு ஆண், பெண் பாகுபாடு கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
குடிக்கவே கூடாது என்ற முடிவுக்கு வந்த குடி நோயாளிகள் மரு த்துவர்கள் உதவியுடன், குடியை முழுமையாக நிறுத்தி நிறைவான, சந்தோஷமான எதிர்காலத்தை நிச்சயம் உருவாக்கிக்கொள்ள முடியும். பொதுவாக குடிப்பவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அதிகமாகக் குடிப்பவர்கள், எப்போதாவது குடிப்பவர்கள், குடிக்கு அடிமையானவர்கள். இவர்க ளில் அதிகமாக குடிப்பவர்களும், எப்போதாவது குடிப்பவர்களும் குடிநோயால் பாதிக்கப்படுவதில் லை.
அதனால் அவர்கள் எப்போது வே ண்டுமானாலும் குடிக்கும் பழக்கத்தை நினைத்தவுடன் விட்டுவிட முடியும். ஆனால் குடிக்கு அடிமையாகும் குடிநோயாளிகளால் அப்படிச் சுலபமாக குடிக்கும் பழக்கத்தை விட்டுவிட முடியாது. குடிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். அது எந்தக் காரணமாக இருந்தாலும் குடிப்பழக்கம் என்பது அழிவை நோக்கியப் பயணம்!” என்று சொன்னார்.
‘ட்ரீட் கலாசாரத்துக்கு பலியான பெண்கள்’
ஆண்களுக்கு இணையாகப் பெ ண்களும் குடிப் பழக்கத்துக்கு அடி மையாகி வருகிறார்கள் என்பது தான் தமிழகத்தின் லேட்டஸ்ட் நிலவரம். இதுபற்றி பெண்கள் சிறப்பு குடி நோய் ஆலோசகரிடம் பேசி னோம்.
”நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதம் பெண்கள் இன்றைக்கு மதுவுக்கு அடிமையாகியுள்ளனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். இப்படி ஆண்களைப்போல் அதிகமாகப் பெண்களும் இன் றைக்கு மதுவினை நாடிச்செல்ல மிக முக்கியக் காரணமாக அமை வது, ஆண் நபரின் தூண்டுதல் மற்றும் மரபுவழிப் பழக்கம் என்றுசொல்கிறார்கள். ஆண்களை விட மதுவுக்கு அடிமையாகும் பெண்களே அதிகப்படியான பிரச் னைகளை சந்திக்க வேண்டியிரு க்கிறது.
குடிக்கும்பெண்கள் எல்லாம் குடி நோய்க்கு அடிமையாவது கிடை யாது. அப்படி அடிமையாகும் பெண்கள் அவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து மீண்டுவருவது கிடையாது. பெண்களில் சிலர் சாதாரணமாகக் குடிக்கத் தொடங்கி குடிநோய்க்கு அடிமையானவர்கள்தான்.
சென்னையைப் பொறுத்தவரை கலாசார மாற்றமும் பெண்கள் குடி ப்பதற்கு ஒரு முக்கியக் காரணமாகியிருக்கிறது. இங்கே குடித்தால் தான் ஸ்டேட்டஸ் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
முன்பெல்லாம் ஏதாவது விழா என்றால் அங்கே பலவித சாப்பாடு கள் இடம்பெறுவது வழக்கமாக இரு ந்தது. ஆனால், இன்றைக்கு தொட்ட துக்கெல்லாம் ட்ரீட் என்ற கலாசார ம் உருவாகிவிட்டது. பார்ட்டி என்றா லே மது இல்லாமல் இல்லை.
அதிலும் குறிப்பாக இன்றைக்கு ஐ.டி கம்பெனிகளில் பணிபுரிபவர் கள் எதற்கெடுத்தாலும் பார்ட்டி என்கிற வலையில் சிக்கி சீரழிந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட பார்ட்டிகளு க்கு குடிக்கவே மாட்டேன் என்ற சுயகட்டுப்பாட்டுடன் செல்பவர்க ளை க்கூட அங்கிருக்கும் சூழல் மாற்றிவிடுகிறது.
‘எல்லாரும் குடிக்குறாங்க நாம மட்டும் குடிக்காம இருந்தா.. அவ ங்க நம்மை என்ன நினைப்பாங்க?’ என்று தனக்குள்ளே ஒரு கேள் வியை கேட்டுக்கொண்டு அதற்கான சரியான பதிலாகக் குடிப்பதை யே இன்றைய இளைய தலைமு றையில் அதிகமானோர் தேர்வு செய்கிறார்கள்.
சிலரோ, ‘ஒருமுறை குடித்துதா ன் பார்ப்போமே!’ என்று நினை த்து குடிக்கத் தொடங்கி பிறகு அதுவே தொடர்கதையாகி விடு கிறது” என்றவர், குடிக்காமல் இருக்க சில டிப்ஸ்களைக் கொடுத்தார்.
”குடிக்கக் கூடாது என்ற உறுதியுடன் பார்ட்டிக்குப் போகிறவர்கள், போகும் முன்பே வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம். அங் கே உங்களை கிண்டல் அடிப்பார்கள். அதனால் நீங்களே குடிக்க நினைத்தாலும் உங்கள் வயிறு அதை ஏற்றுக்கொள்ளாது.
நண்பர்களின் வற்புறுத்தல்களில் இருந்து தப்பிக்க, பார்ட்டிக்குச்சென்றவுடனே ஒரு கிளாஸ் டிரி ங்க்ஸ் எடுத்து சும்மா கையில் வைத்துக்கொண்டு பார்ட்டியில் அங்கும் இங்கும் சுத்திக்கொண் டு இருந்தாலே போதும். அவர்க ளை யாரும் குடிக்கச் சொல்லி கேட்கவோ, கட்டாயப்படுத்த வோ மாட்டார்கள். குடிக்கவே மாட்டேன் என்று சொல்பவர்க ளை த்தான் குடிக்க வைக்க அதிகம் தூண்டுவார் கள்” என்கிறார்.
விடுபட என்ன வழி?
குடிநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்ற சந்தேகத்துக்கும் அவரே பதில் சொன்னார். ”ஒரு குடி நோயா ளியால் முழுமையாக குடிப்பதை நிறுத்த முடியுமே தவிர, குடிக்கும் அளவைக் குறைக்க முடியாது. அவர் குடிக்கக் காரணம் அவரு டைய நோயே. இதற்கு மனைவியோ, பெற்றோரோ, நண்பர்களோகாரணமில்லை.
வாக்குறுதி கொடுப்பதால் (சத்தியம் செய்வது) யாரும் குடியை நிறுத்திவிட முடியாது. அதெல்லாம் அதிகபட்சம் ஒரு மாதம் நீடிக்கு மே தவிர, குடியை நிறுத்த சாத்தியம் சத்தியத்துக்கு இல்லை. சொல் லப்போனால் இப்படிப்பட்டவர்கள் மறுபடி யும் அளவுக்கு அதிகமா கவே குடிக்க வாய் ப்பு உண்டு.
இப்படி குடிநோயால் பாதிக்கப்பட்டவர் கள் தன்நலன் மற்றும் குடும்ப நலனைக் கருத்தில்கொண்டு, குடியை நிறுத்த சிகிச் சை எடுத்து க்கொள்ள சம்மதித்து முன் வர வேண்டியது அவசியம்.
எப்போதுமே ஒருவரால் அன்பு, அரவணைப்பு, மிரட்டல் அல்லது கண்டிப்பின் மூலமாகக் குடியை நிறுத்திவிட முடியாது.
இவர்கள் குடிநோயிலிருந்து மீண்டுவர மருத்துவ மற்றும் மனோ தத்துவ ரீதியான சிகிச்சை மிக முக்கியம்.
போதையில் இல்லாத சமயமாகப் பார்த்து குடிநோயாளியிடம் பேசி அவரை சிகிச்சைக்கு சம்மதிக்க வைக்க வேண்டும். குடிநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ம னையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டும்.
மது மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் கைநடுக்க ம், தூக்கமின்மை, தாங்க முடியாத வயிற்று வலி போன்ற பிரச்னை கள் வரலாம். இதற்குத் தேவையான மருத்துவ உதவிகளையும், சிகி ச்சைகளையும் குடிநோயாளிகளுக்கு முதல் வாரத்தில் அளிப்போ ம். பின்பு மூன்று வாரங்களுக்கு மனோரீதியான சிகிச்சைகள் அளி க்கப்படும். நான்கு வார காலம் இந்த சிகிச்சை தொடரும்.
இந்த காலகட்டத்தில் நேரத்துக்கு உணவு உட்கொள்ளுதல், உடற் பயி ற்சி, விளையாட்டு போன்றவற்றை நோயாளிகளைத் தொடர்ந்து பின் பற்றச் செய்வோம். மேலும், இங்கு சிகிச்சை பெறும் நோயா ளிகளை ஒன்றிணைத்து அவர்கள் எதிர்கொ ண்ட பிரச்னைகளை ஒருவருக்கொ ருவர் குழுவாக அமர்ந்து பேச வைப் போம்.
பெண் நோயாளிகளுக்கு கைவினைப் பொருட்கள் செய்யப் பயிற்சி கள் வழங்குவோம். அடுத்ததாக இங்கு பயிற்சி பெற்று குணமடை ந்து சென்றவர்களை வரவழைத்து அவர்களது முந்தைய நிலை மற்றும் தற்போதைய நிலையை பகிர்ந்துகொள்ளச் செய்வோம்.
நோயாளியின் குடும்ப அங்கத் தினர்களுக்கும் இரண்டு வார ங்கள் கவுன்சிலிங் கொடுப் போம். சிகிச்சை முடிந்து வீட் டுக்குச் சென்றவ ர்களைத் தொடர்ந்து இரண்டு ஆண்டு கள் மாதம் ஒருமுறை வரவ ழைத்து ஆலோசனை வழங்கு வோம். குடிநோய் குணப்படுத் தக் கூடிய நோய் என்பதை உணர்ந்தாலே போதும்!” என்று அக்கறை யோடு சொல்லிமுடித்தார்.
காசுகொடுத்துப் பிரச்னைகளையும், நோய்களையும் வாங்கவேண் டுமாஸ என்பதை பாட்டிலைத் திறக்கும் முன்பு யோசிங்க மக்களே!
உடல் ரீதியாக மனரீதியாக ஒழுக்க ரீதியாக மனிதனிடம் பாதிப்புக ளை ஏற்படுத்தி அவனது வாழ்க்கையை அவனது குடும்பத்தினரின்வாழ்க்கையைச் சீரழித்து, சின் னாபின்னமாக்கக் கூடிய மற் றொருத் தீய பழக்கம் மதுக் குடிப்பழக்கம்.
மது இயற்கையில் உண்டாகிற ஒரு திரவமன்று. அது பதார்த்த ங்கள் கெடுவதால் உண்டாவ தாகும். கோதுமை சோளம் ஒட்ஸ் பார்லி அரிசி திரட்சை போன்றவற்றைலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. திராட்சை ரசத்தைப் புளிக்க வைக்கும் ஈஸ்ட் சத்தானது பழத்திலும் தானியங்களிலுமுள்ள மாவையும் சர்க்கரை யை யும் மதுவாக மாற்றி விடுகிறது.
சண்டை சச்சரவுகள் களவு கொலை கற்பழிப்பு போன்ற எல்லா வித மான கீழ்த்தன்மைச் செயல்களும் குற்றங்களும் மதுவின் தூண்டு தலாலேயே நடைபெறுகின்றன.
நீதிமன்றங்களில் மிகக் கடுமை யான தண்டனை அடைந்தவர்க ளில் பெரும்பாலானோர் இந்த மதுவினால் கீழ்த்தன்மைக்கு உ ள்ளானவர்களே. யுத்தம் பஞ்சம் கொள்ளைநோய் ஆகிய இம்மூ ன்றும் கொண்டுவந்த அழிவை விட மதுபானம் அதிகக்கேடு வி ளைவிக்கக் கூடியது என்று கூ றுவார்கள்.
உடலினுள்ளே தப்பித் தவறி ஊடுருவும் நோய்க் கிருமிகளை அழிக் கும் சக்தி நமது உடலுக்கு இயல்பாகவே உண்டு. நோயை எதிர்க் கும் இந்த ஆற்றலை மது அழித்து விடுகிறது.
இதனால் மது அருந்துபவர் எளிதில் எந்நோய்க்கும் இரையாவார். மது அருந்துபவரின் மனம் அம்மனிதனை எளிதில் ஒரு மிருகமாக்கி விடும். மனிதத் தன்மை அழிந்து மிருக சக்தி ஏற்படுவதால் அவர்க ளுக்கு நல்லது கெட்டது எதுவும் புரியாது.
நாள்தோறும் சிறிது மதுவை க் குடித்து வருபவர் தனக்கு மதுவால் அதிக தீங்கு நேரவில்லை. நேராது என்று எண்ணி தன் னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வார். ஆனால் அவர் தனது ஈரல் மூளை நரம்புகள் சிறுநீரகங்கள் பாலின உறுப்புகள் நுரையீர ல்கள் இரைப் பை இரத்தக் குழாய்கள் ஆகியவற்றின் உட்புறத்தைப் பாதிக்க நேர் ந்தால் இந்த உறுப்புகளெல்லாம் சிறிது சிறிதாகக்கெட்டுவருவதை அறியக் கூடும்.
ஒரு மனிதன் குடிப்பதைப் பொறுத் து குடிக்கப்படும் மதுவில் 20 சத வீதம் உடனடியாக ரத்தத்துடன் கல க்கிறது. குடிக்கப் பட்ட மது முழுவ தையும் கல்லீரல் எரிக்கும் வரை அது மூளை முதலான உடல் உறுப் புகளில் பரவுகிறது. இதைத் தொடர் ந்து இரத்தத்தில் கல ந்து ஆல்க ஹாலின் அளவைப் பொறுத்து வி ளைவுகள் எற்பட்டு விடு கின்றன .
மதுவின் ஆக்கரமிப்பால் உடல் நரம்புகளும் பாதிப்படையும். பார் வை நரம்புகள் பாதிக்கப்படும் கைகால் நரம்புகள் தாக்குதலுக்குள் ளாகும். குடலின் புண் ஏற்பட்டு இரைப்பை அழற்சி நேரும். குடல் கல்லீரல் செல்கள் சேதப்படும். உடலின் ஒவ்வோர் உறுப்பிலும் பாதிப்பின் சுவடுகள் அதிகமாகும்.
பொழுதுபோக்காக ஆரம்பிக்கப்ப டும் மதுப்பழக்கம் பின்எந்நேரமும் மதுவைப்பற்றி நினைவுடனேயே இருக்க வைத்துவிடும். குடிக்கும் அளவு எல்லை மீறிப்போகும்.
குடிக்கு அடிமையான பின் நரம்புத் தளர்ச்சியால் கைகால்கள் நடுங்கு ம். நடுங்கும் அறிகுறிகளைத் தவிர் க்க மேலும் குடிப்பார் கள். மதுவை வாங்கி வீட்டில் வைத்துக் கொ ண்டு குடிக்க ஆரம்பிப் பார்கள். பின் வெளிப்படையாகத் தெரிய ஆர ம்பித்து சுயக் கட்டுப் பாடு மீறிப் போய்விட்டால் குடிப்பதற்காகப் பல வித காரணங்களை க் கூறுவார்கள். அந்த காரணங்களை நியாயப்படுத்துவார்கள. சொ ல்லியும் கேட்காமல் குடித்ததற்கு மன்னிப்புகளை அள்ளி விடுவார் கள்.
குழந்தை இல்லையென்ற கவலை யை மறக்கச் சில ஆண்கள் மது அரு ந்துவதும் உண்டு. குழந்தை இல்லா மைக்காக அவரின் மனை வியும் மது அருந்த ஆரம்பித்தால் சமுதாய ம் என்னாவது ?
நட்புக்காகக் குடிப்பதற்கும் அடிமை யாவதற்கும் இடையேயான நூலி ழை போன்ற அளவுக்கோட்டை எப் போது நாம் தாண்டினோம் என்ப தைப் பல குடிகாரர்கள் அறிய நி னைத்தும் முடிவதில்லை. தங்கள் வா ழ்க்கையை மெல்ல மெல்ல அது அழித்துக் கொண்டு வருகிறது. என்று அவர்கள் உணர்ந்த நிலையிலும்கூட அப்பழக்க த்தை அவர் களால் கைவிட முடியாது.
மது அருந்துவது உடல் நலத்தை மட்டுமின்றி மன நலத்தையும் அதிக அளவில் பாதிக்கும். அளவுக்கு மீறி மது குடிப்பது. மது குடிப்பது பற்றியே நெடுநேரம் சிந்தித்து க் கொண்டிருப்பது. குடிக்காமல் நிறுத்திய உடனே உடலளவிலும் மனத்தளவிலும் பதற்றம். நடுக்க ம் ஏற்படுவது போன்றவை ஒரு வன் மதுப் பழக்கத்திலிருந்து குடி நோயாளியாகவே மாறிவிட்டதை உணர்த்தும்.
மெல்ல மெல்லக் காரணமற்ற பயம் தன்னைப் பற்றியும் தன் குடும்ப ம் பற்றியும் அவநம்பிக்கையான எண்ணங்கள் வெறித்தனம் தாம்பத் ய உறவில் பிரச்னைகள் மூளையின் செயல்திறன் மங்கிப்போதல் முக்கியமாக நினைவாற்றல் இழக்கும் நிலை மது குடிக்கவில்லைஎன்றால் ஒருவித மனப்ழீர மை அதிம்சி நடுக்கம் எரிச் சல் போன்ற மனநலக் குறை பாடுகள் தோன்றும்.
இது முற்றிய நிலையில் குடு ம்பத்தினர் நண்பர்கள் சக ஊழியர்கள் போன்றோரின் தொடர்பும் உறவும் துண்டிக்கப் படுவதுடன் உடல் ரீதியாக வேறு பாதிப்புகளும் அதிகமாகி விடும். ஒரு கட்டத்தில் அந்த வகை மது வை எவ்வளவுதான் குடித்தாலும் போதை ஏறாத தால் அதிலும் மட் டமான ஆனால் மேலும் போதை தரக்கூடிய சாரா யம் போன்ற வற்றைக் குடிக்க ஆரம்பிப்பர்.
குறைந்த செலவில் அதிகபோதை நாடி கள்ளச் சாராயம் குடித்து கண் இழந்து உறுப்புகள் செயலிழ ந்து எத்தனை குடும்பங்கள் தவித் து நிற்கின்றன என்பதைத்தான் நாம் அவ்வப்பொழுது பத்திரிகை களில் பார்க்கிறோமே? அதைத் குடித்தும் மரத்துப் போய் போதை யின் அளவு குறையக் குறைய தூக்க மாத்திரைகளை சிலர் பயன்ப டுத்த ஆரம்பிப்பர்.
பின்னர் தூக்க மாத்திரைகளை அதிகம் போட்டும் அவற்றாலும் பயனின்றிப் போக அடுத்த கட்டமாக போதையை இன்னும் அதிகம் நாடி போதை மருந்துகளை ருசி பார்க்க முயலுவர்.
இவ்விதம் குடிகாரனின் போதை உணர்வு அதிகமாகிக் கொண்டேபோய் ஒரு வெறியாய் மாறி விடும். கடைசியில் கோமா என்னும் நிலைக்குப் போய் விடுவோரும் உண்டு.
உலகில் மதுவால் அழிவுள்ள மனிதர்கள் குடும்பங்களின் எ ண்ணிக் கை கணக்கில் அடங் காது. நன்றாக வாழ வேண்டும் மதிப்பு மிக்கவ ர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணமுடைய வர்கள் கண்டிப்பாக மதுவைத் தொடக் கூடாது.
மனம் கட்டுப்பாடாக இருந்தால் சூழ்நிலை படு மோசமானதாக இரு ந்தாலும் மனக் கட்டுப்பாடு கொண்டவர்களை யாராலும் குடிகார னாக்க முடியாது. குடிகாரர்கள் மத்தியிலும் கூட ஒழுக்கத்தில் உயர்தவராகளாகவே வாழலாம். எனவே மனக் கட்டுப்பாட்டுடன்மதுவை வெறுப்போம்.
உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும்
இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் மது அருந்துதல், புகைத் தல் ஆகியன ஒரு பஷனாக மாறிவிட்ட நிலையில் விருந்து பசாரம் போன்ற களியாட்ட நிகழ்வுகளில் மதுபான வகைகளுக்கு முக்கி யத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன.
ஏதாவது கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு வருமாறு இளைஞர்களுக் கு அழைப்பு விடுத்தால் வைன், பியர், பிஸ்கி, பிறண்டி வழங்கப்படு கின்றனவா என்று கேட்டுக் கொண்டே மேற்படி கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு பலர் ஒன்றுகூடும் களியாட்ட நிகழ்வுகளில் மது அருந்து தல் என்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது என்பதுடன், மது அருந் தாது விடுபவர்களை பட்டிக்காடு என்று நோக்கும் நிலையும் வந்து விட்டது.
ஆனால், இவற்றால் எமது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப் புக்களை எவரும் சிந்தித்துப் பார்பது மில்லை. அவ்வாறு சிந்திப் பவர்களின் புத்தியையும் மது என்ற பானம் மயக்கி விடும்.
மது அருந்துதல், புகைத்த ல் மற்றும் வெற்றிலையுடன் பாக்கு, சுண் ணாம்பு சேர்த்து உ ணு தல் இந்த மூன்றும் எமது உடலுக்கு பாதக மானவையாகும்.
அளவுக்கதிகமான மதுபான வகைகளைப் பாவிப்பவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி, பாலியல்க்குறைபாடு, ஈரல் கரைதல் போன்ற நோ ய்களும் புகைப்பவர்களுக்கு சுவாசப் புற்றுநோய், நரம்புத்தளர்ச்சி, பாலியல்க்குறைபாடு போன்ற நோய்களும் வெற்றிலையுடன் பாக் கு, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுபவர்களுக்கு வாய்ப்புற்று நோயும்ஏற்படுகின்றன.
இது தவிர, ஒருவர் புகைப்பிடிக்கும்போது அருகிலுள்ளவர்களும் தன்னிச்சையாக புகைப்பிடிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு தன்னிச் சையாக புகைப்பிடிப்பதற்கு பெ ண்களும் விதிவிலக்கல்ல என்பதுடன், பெண்கள் தன்னிச்சை புகைத்தலுக்கு ஆ ளாகுவதால் அவர்களது சந்ததியினருக் கே ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்ப டுகிறது.
எமது நாட்டு அரசாங்கம் மது மற்றும் புகைத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படு த்துவதற்காக “மத்தட திட்ட” என்னும் மது வுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி ஓரளவு வெற்றி கண்டது.
தற்போது மதுபாவனையால் ஏற்படும் நோய்களுக்கு 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து அரசாங்க வைத்திய சாலைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்து ள்ளது. எனினும், அரசாங்கத்தின் இந்த நடமுறையானது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பதும் கேள்விக்குறியே.
பெருங்குடி மக்களுக்கு ஏற்படும் அபாயங்கள்
இன்றைய காலத்தில் மார்டன் என்ற பெயரில் மது அருந்துபவ ர்ககளின் எண்ணிக்கை அதிக மாக உள்ளது. இதுவரை ஆண்கள் தான் அதிகளவில் மது அருந்திக் கொண்டிருந்தனர். தற்போது பெண்களு ம் குடிக்க ஆரம்பித் துவிட்டனர்.
சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களே அதிகம் குடிக்கின் றனர். அத்தகையவர்களிடம் மது அருந்துவீர்களா என்று கேட்டால், அவர்கள் இல்லை, அது ஃபேஷன் நான் அவ்வளவாக அருந்தமாட்டேன் என்று சொல்வார்கள்.
ஆனால் என்ன தான் ஃபேஷனாக இருந்தாலு ம். அவற்றை குடிப்ப தால், உடலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக் கையைச் சொன்னா ல், நம்பவேமாட்டீர்கள். அந்த அளவு நோயா னது ஏற்படும். இந்த பழ க்கத்தை உடனே நிறு த்த முடியாது. ஆனால் வயதுக்கு ஏற்றவாறு குறைத்துக் கொண்டு வந்தால், நல்லது.
ஒருவேளை அவ்வாறு செய்யாவிட்டால்,பின் மது அதன் உண்மை யான சுயரூபத்தை வெ ளிக்காட்டும். அதாவது உயர் இரத்த அழுத்த ம், இதயநோய் போன்றவை உடலில் ஏற்படும்.
அதுவும் குறைந்த வயதிலேயே அளவுக்கு அதிகமான அளவில் ஆல் கஹால் பருகினால், அவை இளம் வயதிலேயே உடலில் நோய் களை அதிகமாக்கிவிடும். உண்மையில் நிறைய நோய்கள் ஆல் கஹால் பருகுவதால், ஏற்படுகிறது.
இப்போது அவ்வாறு மது பருகுபவ ர்களின் உடலில் சாதாரணமாக எந்த நோய்கள் வரும் என்பதை பட் டியலிட்டுள்ளோம். அதைப் படி த்து தெரிந்து கொள்ளுங்கள்.
கல்லீரல் இழைநார் வளர்ச்சி:
இந்த நோய் குடிப்பழக்கம் உள்ளவர் களுக்கு ஏற்படும். இந்த நோயா ல் கல்லீரலில் உள்ள செல்களில் டாக்ஸின்கள் தங்கி, அந்த செல்க ளை அழிக்கும். இவை தொட ர்ந்தால், இறுதியில் கல்லீரலின் செயல் பாடு முற்றிலும் குறைந்து, இறப்பு ஏற்படும்.
அதிக இரத்த அழுத்தம்:
பொதுவாக மதுபானங்கள் பருகினால், இரத்த அழுத்தம் அதிகரிக் கும். அவையே அளவுக்கு அதிகமானால், இரத்த அழுத்தமானது உட னே அதிகரித்து, பின் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்
அதிக எடை:
வோட்கா, பீர் மற்றும் ஜின் போன்றவற் றில் கொழுப்புகள் அதிகம் உள்ளன. பொதுவாக இவற்றை இந்த ஆல்கஹாலில் உணவுகளை விட, அதிகமான அளவில் கலோரிக ள் இருக்கும். எனவே இதனை பருகினால், உடல் எடை அளவுக்கு அ திகமாக அதிகரித்துவிடும். பின் உடல் பாதிப்பின் ஆரம்ப நிலையா ன தொப்பை வந்து, பின் பல்வேறு கொடிய நோய்களும் உடலில் வந்துவிடும்.
தய நோய்:
இரத்த அழுத்தம் உடலில் அதிகரித்தால், இவை இதயத்திற்கு அழுத் தத்தை கொடுத் துவிடும். பின் மாரடைப்பு ஏற்படும். அது மட்டுமின்றி, ஆல்கஹால், இரத்தத்தை உறைய வைத்து, இதயத்திற்கு போதிய இரத்த ஓட்டத்தையும் தடுத்துவிடும்.
அனீமியா:
அனீமியா எனப்படும் இரத்தக்குறைவு, ஆல்கஹால் பருகுவதால், ஏற்படும். ஏனெனில் ஆல்கஹால் பருகும் போது, ஆக்ஸிஜனை எடு த்துச் செல்லும் கொள்ளவானது குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால் எந்த வேலை செய்யாமல் இருக்கும்போ தும், அதிகமான சோர்வு ஏற்பட்டு, மூச்சுவிடுவதே கஷ்டமாக இரு க்கும்.
மன அழுத்தம்:
மன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காக ஆல்கஹால் பருகுவா ர்கள். ஆனால் உண்மையில் ஆல்க ஹால் பருகினால், தான் விரைவில் மன அழுத்தம் மற்றும் மன இறுக் கம் ஏற்படும்.
மூட்டு வலி:
மூட்டுகளில் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால், மூட்டு வலியானது ஏற் படுகிறது. அதிலும் ஆல்கஹால் அதிகமாக பருகினால், மூட்டுக ளில் இன்னும் அதிகமான வலி ஏற்படும்.
கணைய பாதிப்பு:
மது அருந்தினால், கணையத்தில் காயங்கள் ஏற்பட்டு, சாதாரணமா க நடைபெறும் செரிமானத்தையும் பாதிக்கும். இத்தகைய பிரச்ச னை ஏற்பட்டால், அது குணமாவது மிகவும் கடினம். இதனால் இறப் பு கூட ஏற்படலாம்.

Sunday, May 31, 2015

இஞ்சி சாறுடன் சிறிது, தேன் கலந்து குடித்து வந்தால் . . .

 


வயிற்றில் சதை அதிகமாவதால் தொந்தி விழுகிறது. இந்த தொந்தி யை
குறைத்து ஆரோக்கியம் பேணுபவர்களுக்கு என்றும் இதய நோய் அவர்களை நெருங்காது. இந்த தொந்தி இருக்கும் சிலருக்கு குறட்டை அதிகம் ஏற்படும். இதற்கு தொந்தியும் ஒரு முக்கிய காரணம். பெண்களுக்கு அதிகமாக இந்த வயிற்று சதை பிரச்சனை இருக்கி றது. குழந்தையின்மைக்கு ஒரு காரணமாக கருதப்படும் தொந்தியை குறைக்க இஞ்சி சாற்றுட ன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டாகும்.
செய்முறை
500 கிராம் இஞ்சியை தோல் நீக்கி இடித்து சாறு பிழிந்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சிறு தீயிட்டு எரிக்கவும். சுண்டியதும் இறக்கிவிடவும். சாறு எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவுக்கு தேன் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து சிறு தீயாக ஒரு நிமிடம் எரித்து இறக்கி பத்திரத்தப்படுத்தவும்.
சாப்பிடும் முறை
காலை சாப்பாட்டுக்கு அரைமணி நேரத்துக்கு முன்பும், மாலை 6 மணிக்கும் ஒரு மேசைக்கரண்டி அளவு 40 நாட்கள் தொடர்ந்து உட்கொண்டால் தொந்தி குறையும். அத்துடன் உணவுக்கட்டுப்பாடும் வேண்டும்
குறிப்பு
இந்த இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து குடிக்க‍த் தொடங்கும்முன் உங்களது உடலில் சர்க்க‍ரையின் அளவை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள‍வது அவசியம்.

Sunday, May 24, 2015

ஆண்களே, தாடியும் மீசையும் அடர்த்தியாக, விரைவாக வளர



ஆண்களுக்கு அழகே மீசைதான். நிறைய பெண்களுக்கு மீசை மற்றும் தாடியை ஆண்கள் வைத்திருந்தால், மிகவும் பிடிக்கும். ஆனால் சிலருக் கு மீசை மற்றும் தாடியானது சரியான
வளர்ச்சி பெறாமல் இருக்கும். எனவே அத்தகைய பிரச்சனையில் இருக்கும் ஆண்களுக்கு, மீசை மற்றும் தாடியை நன்கு வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப்படித்துபின் பற்றி பார்க்கலாமே!!!
புரோட்டீன் உணவுகள்
உடலின் ஆரோக்கியத்தைப்பொறுத்தே, மீசை மற்றும் தாடியின் வளர்ச்சி உள்ளது. எனவே உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, போதிய ஊட்டச்சத்துள்ள உணவுகளை நன்கு சாப்பிட வேண்டும். குறிப்பாக புரோ ட்டீன் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளான பீன்ஸ், முட்டை, பால், மீன் போன்றவற்றை அதிகம் டயட்டில் சேர்த்தால், அதில் உள்ள மற்ற சத்துக்கள் கூந்தல் வளர்ச்சி யை அதிகரிக்கும்.
அடிக்கடி ஷேவிங்
மீசை மற்றும் தாடி நன்கு வளர வேண்டுமெனில், அடிக்கடி ஷேவிங் செய்ய வேண்டும். இதனா ல் அங்கு கூந்தல் வளர்ச்சி குறைவாக இருந்தாலும், வளர்ச்சியானது அதிகரிக்கும்.
விளக்கெண்ணெய்
மீசை மற்றும் தாடியை நன்கு அடத்தியாக வளரச் செய்வதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அது விளக்கெண்ணெயை வைத்து மசாஜ் செய்வதுதான். இதனால் அங்குள்ள இரத்த ஓட்டமானது அதிகரித்து, மயிர் கால்கள் வலுவோடு வளர்ச்சி பெறும்.
டெஸ்டோஸ்டிரோன்
என்பது ஆண் ஹார்மோன். இவை தான் ஆண்க ளின் கூந்தல் வளர்ச்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த ஹார்மோன் ஆண்களி ன் உடலில் குறைவாக இருந்தாலும், கூந்தல் வளர்ச்சியானது குறைவாக இருக்கும். எனவே டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் ஜிங்க் அதிகம் உள்ள உணவுகளான முட்டை, மீன், கடல் சிப்பிகள், வேர்க் கடலை, எள் போன் றவற்றை அதிகம் உட்கொள்வதன் மூலம், மீசை மற்றும் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
தண்ணீர்
உடலில் வறட்சி இருந்தாலோ அல்லது டாக்ஸின்கள் இருந்தாலோ, அவை கூந்தல் வளர்ச் சிக்கு தேவையான சத்துக்களை மயிர்கால்களுக்கு கிடைக்கப் பெறாமல், தடுக்கும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும்.
போதுமான தூக்கம்
தூங்கும் போதுதான் உடலில் உள்ள அனைத்து பாகங்களில் உள்ள பழுது களும் சரியாகும். எனவே மீசை நன்கு வளர்ச்சியடைவ தற்கு, நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
இயற்கை வைத்தியம்
ரோஸ்மேரி ஆயிலுடன், ஆப்பிள் சீடர் வினிகர், ஜிஜோ பா ஆயில் மற்றும் கற்றாழை ஜெல் போன்றவற்றை கலந்து, தாடி மற்றும் மீசை வளரும் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வந்தால், மீசை நன்கு வளரும்.