horse

horse

Friday, September 26, 2014

கர்ப்பிணிப்பெண்கள் மல்லாந்து படுக்கலாமா?


கர்ப்பிணிப்பெண்கள் மல்லாந்து படுக்க லாமா?
கர்ப்பிணி மல்லாக்கப்படுப்ப‍து என்பது அதாவது விட்ட‍த்தை நேராக பார்த்த‍படியும், முதுகுப் பகுதி முழுவதுமாக தரையிலோ அல்லது படுக்கையிலோ முழுவதுமாக படும்ப்டி படுப்ப‍து,
அப்ப‍டி கர்ப்பிணிகள் மல்லாக்கப் படுக்கும் போது
ர்ப்பப்பை ரத்தக் குழாய்களை அழுத்துவதால் குழந்தை க்குசெல்லுகின்ற ரத்தத்தின் அளவு மற்றும் போசனைப் பொருட்களின் அளவு குறையலாம். ஆகவே இடது புற பக்க வாட்டாக படுப்பது நல்லது.
இடதுபக்க பக்கவாட்டாக படுக்கும்போது உங்க ளையறியாமலேயே மல்லாக்கத் திரும்பி விட் டால் பெரிதாக கவலைப்படத் தேவை இல்லை , மீண்டும் பக்கச்சரிவாக படுத்துக்கொள்ளுங்கள்.

கல்லீரலில் கவனம் தேவை!


மலேரியா, சர்க்கரை நோய், எய்ட்ஸ், புற்றுநோய் பற்றி நமக்கு ஓரளவுக்குத் தெரியும். ஆனால், சத்தமில்லாமல் கொல்லக்கூடிய, எய்ட்ஸைவிட 100 மடங்கு வேகமாகத் தொற்றக்கூடிய ஹெபடைட்டிஸ் பி உள்ளிட்ட வைரஸ் கிருமிகளைப் பற்றி அதிகம் தெரியாது. ஆண்டுதோறும் 14 லட்சம் பேருக்கு, ஹெபடைட்டிஸ் ஏ தொற்று ஏற்படுகிறது. 2.4 கோடி பேர், ஹெபடைட்டிஸ் பி (எச்.பி.வி) கிருமித் தொற்றுடன் வாழ்கின்றனர். 7.8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஹெபடைட்டிஸ் ஏ, பி, சி, டி மற்றும் இ வைரஸ் கிருமியால் லட்சக்கணக்காணோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய முடியும் என்பது குறித்து, கல்லீரல் சிறப்பு மருத்துவர் ஜாய் வர்கீஸிடம் கேட்டோம்.
‘கல்லீரலில் ஏற்படக்கூடிய அழற்சியை ‘ஹெபடைட்டிஸ்’ என்போம். இந்த அழற்சி ஒரு கட்டத்துக்குள் நின்றுவிடலாம். இல்லை என்றால் கல்லீரலில் சுருக்கம், தழும்பு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.  மேலும் லிவர் ஸ்காரிங், கல்லீரல் செயல் இழப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய்கூட ஏற்படலாம். பொதுவாக நோய்க் கிருமிகள் மூலம் இந்த அழற்சி ஏற்படலாம். தவிர, மது அருந்துதல், சில வகையான மருந்து களை எடுத்துக்கொள்ளுதல் மற்றும் நம்முடைய நோய் எதிர்ப்பு செல்லே நம் உறுப்பைத் தாக்கும் ‘ஆட்டோஇம்யூன்’ பாதிப்பு போன்றவற்றின் காரணமாகவும் ஹெபடைட்டிஸ் ஏற்படலாம்.
கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகள் நிறைய உள்ளன. இந்த வைரஸ் கிருமிகளின் வகைகள், ‘ஏ’-வில் தொடங்கி ‘ஜி’ வரை சென்றுவிட்டது. இதில், ‘ஹெபடைட்டிஸ் பி’ மற்றும் ‘சி’ மிக மோசமானவை. உலகில் லட்சக் கணக்கானோருக்கு கல்லீரல் சுருக்கம் மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்பட, வைரஸ் ‘பி’ மற்றும் ‘சி’ காரணமாக இருக்கின்றன. ஹெபடைட்டிஸ் ‘ஏ’ மற்றும் ‘இ’ உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவுகிறது. பி, சி, டி ஆகியவை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய ரத்த வழித் தொடர்புகொள்வதன் மூலமே ஏற்படுகிறது.
பொதுவாக, பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தைப் பெறுதல், சரியாகச் சுத்தப்படுத்தப்படாத ஊசி உள்ளிட்ட அறுவைசிகிச்சைக் கருவிகளைப் பயன்படுத்துவதாலும் பரவுகிறது. ‘ஹெபடைட்டிஸ் பி’வைரஸ் மட்டும் இதனுடன் கூடுதலாகக் கர்ப்பக் காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கும் மற்றும் உடல் உறவு மூலமாகவும் பரவுகிறது. எனவே, கர்ப்பிணிகள் மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதில் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தால், சிசுவுக்கு அந்தப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணியும் தனியாக ஹெபடைட்டிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்றைத் தடுக்க, குழந்தைப் பிறந்ததும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட வேண்டும். எந்த வயதினரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

பாதுகாப்பற்ற ரத்தப் பரிமாற்றத்தைத் தவிர்க்க வேண்டும். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஊசியைப் பயன்படுத்த வேண்டும். உணவு மற்றும் தண்ணீர் மூலம் ஹெப டைட்டிஸ் ஏ மற்றும் இ வைரஸ் பரவாமல் இருக்க, தனிநபர் சுகாதாரம் அவசியம். நோய்த் தொற்று உள்ளவர் உணவை சமைக்கும்போதோ, பரிமாறும்போதோ, அது மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, சுத்தமாக இருப்பதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பலாம்’ என்று எச்சரிக்கிறார்.
தொற்றைத் தடுக்க… தேவை விழிப்பு உணர்வு!
”பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகளில் இந்த வைரஸ் கிருமித் தொற்று பற்றிக் கண்டறியும் முகாம்களை நடத்த வேண்டும். ஒருவேளை பாதிப்பு கண்டறியப்பட்டால், அதை எப்படிக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும். தவிர, அனைவருக்கும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசியைக் கட்டாயமாக்க வேண்டும். இதைச் செய்தாலே, வைரஸ் தொற்றுப் பாதிப்பை பெருமளவு குறைத்துவிட முடியும்” என்கிறார் ஜாய் வர்கீஸ்.

Thursday, September 11, 2014

தலை வலிக்குதா…? ‘செக்ஸ்’ வச்சுக்குங்க சரியாய்டும்!


Posted By Muthukumar,On Sep 11,2014
பெண்களுக்கு எப்போதும் பல நினைவுகள்தான். சமையல் செய்து கொண்டிருக்கும்போதும் சரி, வேலையில் ஈடுபட்டிருக்கும்போதும் சரி, அவர்களது கவனம் பல்வேறு விஷயங்களிலும் பரவி வியாபித்திருக்கும். செக்ஸின்போதும் கூட பெண்களுக்கு ஏகப்பட்ட கவனச் சிதறல்கள் இருக்கிறதாம். அந்த வேலையில் ஈடுபட்டிருக்கும்போதும் கூட பல்வேறு விஷயங்கள அவர்கள் நினைக்கிறார்களாம். இந்த நிலையில், செக்ஸின்போது பெண்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள், என்னவெல்லாம் நினைக்கிறார்கள் என்பதை ஒரு ஆய்வின் மூலம் சொல்லியுள்ளனர். பல பெண்களுக்கு செக்ஸ் உறவின்போது திடீரென எரிச்சல் வந்து விடுமாம். இதனால் அவர்கள் டல்லாகி விடுகிறார்களாம். இதற்குக் காரணம் ஏதாவது கவனச் சிதறலாக இருக்கலாமாம். பல பெண்கள் தங்களது துணையின் வற்புறுத்தலுக்காக உறவுக்கு இணங்குவார்கள். அப்போது அவர்களுக்கு உறுப்பு வறட்சி இருக்குமாம். காரணம், மூட் செட் ஆகாததால். உறவில் ஈடுபடும் 33 சதவீதமான பெண்கள் இந்த உறுப்பு வறட்சியை சந்திக்கிறார்களாம். பெரும்பாலான பெண்களுக்கு உறவு தொடங்கியதுமே அது எப்படி இருக்கும்.. நல்லாருக்குமா, மோசமா இருக்குமா.. திருப்தி கிடைக்குமா, கிடைக்காதா என்ற விவரம் தெரிந்து விடுமாம். சில பெண்களுக்கு சில விதமான பொசிஷனில் உறவில் ஈடுபடும்போது வித்தியாசமான சிந்தனைகள் வருகிறதாம். குறிப்பாக டாகி பொசிஷனில் உறவில் ஈடுபடும்போது பல பெண்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறதாம். பெரும்பாலான பெண்கள் உறவின்போது கத்த வேண்டும் போல நினைப்பார்களாம். குறிப்பாக துணையின் மூலம் கிடைக்கும் சந்தோஷம் அவர்களை உற்சாகத்தின் உச்சிக்குக் கொண்டு போகும்போது கத்தத் தோன்றுமாம். ஆனால் அதை வெளிப்படுத்துவது சிலர் மட்டும்தானாம். உறவின்போது துணையை உற்சாகப்படுத்தவும், அவர்களைத் தூண்டவும், அவர்களை வேகமாக இயங்கச் செய்யவும் 66 சதவீத பெண்கள் முணங்கி மூடை ஏற்றுகிறார்களாம். அதேசமயம், 87 சதவீதம் பெண்கள் தாங்கள் இப்படி முணகி, விரகதாபத்தை ஏற்றுவது, தங்களது துணைக்கு தன்னம்பிக்கை கொடுத்து உற்சாகப்படுத்தவே என்று தெரிவித்துள்ளனர். உறவின்போது பெண்கள் செய்யும் இன்னொரு காரியம் காற்றை வெளியேற்றுவது. ஆனால் இது வாயு பிரிதல் அல்ல. மாறாக பெண்ணுறுப்பில் உறவின்போது தேங்கிக் கொள்ளும் காற்று வெளியேறுவதாகும். பல பெண்களுக்கு உறவின்போது தலைவலி ஏற்படுவது வழக்கமாம். உறவு குறித்த சிந்தனை வந்தாலும் கூட பலருக்கு தலைவலி உணர்வு ஏற்படுமாம். ஆனால் இது வழக்கான தலைவலி இல்லையாம். உறவு குறித்த பதட்டம் அல்லது அந்த சிந்தனை கொடுக்கும் படபடப்பே இதற்குக் காரணமாம். இப்படி தலைவலி வந்தால் கூடவே அவர்களுக்கு ஆர்கஸமும் சேர்ந்து வருமாம். எனவே செக்ஸ் உறவு குறித்த சிந்தனை வரும்போது ஏற்படும் தலைவலியைப் பார்த்து பயப்படாமல் செக்ஸ் வைத்துக் கொள்ள முயற்சித்தால் தலைவலி தானாகவே போய் விடுமாம்.

Saturday, September 6, 2014

டெஸ்டோஸ்டிரோனின் அளவு

 

சில ஆண்களுக்கு டெஸ்டோஸ் டிரோனின் அளவு குறைவாக இருப்பதற்கான காரணங்கள்
டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆ ண் ஹார்மோன். பாலுணர்ச்சி யை தூண்டுவது இந்த ஹார்மோ ன்தான். இது பெண்களுக்கு மிக வும் குறைவான அளவில் இருக் கும். ஆண்களுக்கு சாதாரணமா க இந்த ஹார்மோனானது ஒரு டெசிலிட்டருக்கு 300-1200 நா னோ கிராம் இருக்கும். ஆனால் இதற்கு குறைவாக இருந்தால், ஆண்மைக் குறைவு ஏற்படக் கூடும்.
அதுமட்டுமின்றி, பாலுணர்வின் நாட்டம் இல்லாமை, மன இறு க்கம், அதிகப்படியான சோர்வு மற்றும் இரத்தத்தில் உள்ள
சர்க்கரையின் அளவில் பிரச்சனை போன்றவை ஏற்படக்கூடும்.ஆண்களுக்கு இந்த ஹார்மோன் குறைவா க சுரப்பதற்கு சில காரணங்கள் உள்ளன. அத்தகைய காரணங்கள் சரியாக தெரியாத தால், பலர் என்ன செய்வதென்றே தெரியா மல், கவலையில் சோர்ந்து விடுகின்றனர்.
அப்படி சோர்ந்துவிடுவதால் மட்டும் என்ன நடக்கப்போகிறது? ஆகவே உடலில் டெஸ் டோஸ்டிரோனின் அளவு குறைவாக இரு ந்தால், அதற்கான காரணத்தை முதலில் அறிந்து கொண்டு, பின் அதற்கேற்றவாறு சிகிச்சைகளை மேற்கொண்டால், இதற்கு நல் ல தீர்வு கிடைக்கும். மேலும் தற்போது இந்த பிரச்சனைக்கு நிறை ய சிகிச்சைகள் வந்துள்ளன.
இங்கு ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோனின் அளவு குறைவாக இருப்பதற்கான கார ணங்கள் பட்டியலிடப்பட்டுள் ளன.
1)வயது
ஆண்களுக்கு வயதாக ஆக ஆண் ஹார்மோனான டெஸ் டோ ஸ்டிரோனின் அளவு குறைந்து கொண்டே வரும். அதனால் தான் 30வயதிற்குமேல் ஆண்களால், கருத்தரிக்கஉதவ முடிவதி ல்லை .
2) புற்றுநோய் சிகிச்சைகள்
ஆண்கள் புற்றுநோய் சிகிச்சையா ன ஹீமோதெரபியை மேற்கொண் டிருந்தால், அது டெஸ்டோஸ்டி ரோனின் அளவைக் குறைத்து, மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். ஆனால் சிலருக்கு சில நாட்கள் கழித்து டெஸ்டோஸ்டிரோனின் அளவு அதிகரிக்கும் வாய் ப்பு உள்ளது.
3)உடல் பருமன்
உடல் பருமனும் டெஸ்டோஸ்டி ரொனின் உற்பத்திக்கு தடையை ஏற்படுத்தும். அதன் காரணமாகத் தான் உடல் பருமனுடன் இருப்ப வர்களால் கருத்தரிக்க உதவ முடிவதில்லை. அதுமட்டுமின்றி, உடல் பருமனுடன் இருப்போரு க்கு நீரிழிவு மற்றும் இதய நோய் போன்றவைகளும் வரும்.
4) பிட்யூட்டரி சுரப்பியில் பிரச்ச னை
டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்வதி ல் பிட்யூட்டரி சுரப்பி தான் முக்கிய பங்கி னை வகிக்கிறது. அத்தகைய பிட்யூட்டரி சுர ப்பியில் காயங்களோ அல்லது கட்டிகளோ இருஙநதால், அது டெஸ்டோஸ்டிரோனின் அளவைக் குறைக்கும்.
5)ஆரோக்கிய மற்ற ஹைப்போதலாமஸ்
மூளையின் ஒருபகுதிதான் ஹைப் போதலாமஸ். அவை தான் பிட்யூட் டரி சுரப்பிக்கு டெஸ்டோஸ்டிரோ னை சுரக்குமாறு சொல்லும். ஆனால் காசநோய் மற்றும் இணை ப்புத்திசு புற்று போன் றவை ஆண்களை தாக்கி னால், அது டெஸ் டோஸ்டிரோனின் அளவைக் குறைக்கும்.
6) பாதிப்படைந்த ஆண்விதை
ஆண்விதைகளில் அடிப்பட்டால், அது ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டி ரோனின் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்ப டுத்தும்.
7)அதிகப் படியான X
பொதுவாக ஆண்களுக்கு ஒரு X மற் றும் ஒரு Y குரோமோசோம்கள் இரு க்கும். ஆனால் அதில் ஒரு X ஹார் மோன் அதிகமாக இருந்தால் , அது ஆண் ஹார்மோனின் உற்பத்தியை குறைத்து, டெஸ்டோஸ்டிரோனின் அளவைக் குறைத்து விடும்.
8) பொன்னுக்கு வீங்கி நோய்
சில நேரங்களில் பொன்னுக்கு வீங்கி நோய் ஆண் விதைகளுடன், உமிழ்நீர் சுரப்பியையும் பா திக்கும். அதிலும் இந்த நோயானது சிறு வயதில் வந்திருந்தால், அது கூட டெஸ்ரோஸ்டிரோனின் உற்பத்தியை பாதிக்கும்.
9) ஹீமோகுரோம் நோய்
உடலில் அதிகப்படியான இரும்புச்சத்து இருந்தால், அது ஆண் விதைகளை பாதி ப்பதுடன், பிட்யூட்டரியின் செயல்பாட் டையும் பாதிக்கும். இதனால் டெஸ்டோ ஸ்டிரோனின் அளவு குறையும்.