horse

horse

Thursday, September 11, 2014

தலை வலிக்குதா…? ‘செக்ஸ்’ வச்சுக்குங்க சரியாய்டும்!


Posted By Muthukumar,On Sep 11,2014
பெண்களுக்கு எப்போதும் பல நினைவுகள்தான். சமையல் செய்து கொண்டிருக்கும்போதும் சரி, வேலையில் ஈடுபட்டிருக்கும்போதும் சரி, அவர்களது கவனம் பல்வேறு விஷயங்களிலும் பரவி வியாபித்திருக்கும். செக்ஸின்போதும் கூட பெண்களுக்கு ஏகப்பட்ட கவனச் சிதறல்கள் இருக்கிறதாம். அந்த வேலையில் ஈடுபட்டிருக்கும்போதும் கூட பல்வேறு விஷயங்கள அவர்கள் நினைக்கிறார்களாம். இந்த நிலையில், செக்ஸின்போது பெண்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள், என்னவெல்லாம் நினைக்கிறார்கள் என்பதை ஒரு ஆய்வின் மூலம் சொல்லியுள்ளனர். பல பெண்களுக்கு செக்ஸ் உறவின்போது திடீரென எரிச்சல் வந்து விடுமாம். இதனால் அவர்கள் டல்லாகி விடுகிறார்களாம். இதற்குக் காரணம் ஏதாவது கவனச் சிதறலாக இருக்கலாமாம். பல பெண்கள் தங்களது துணையின் வற்புறுத்தலுக்காக உறவுக்கு இணங்குவார்கள். அப்போது அவர்களுக்கு உறுப்பு வறட்சி இருக்குமாம். காரணம், மூட் செட் ஆகாததால். உறவில் ஈடுபடும் 33 சதவீதமான பெண்கள் இந்த உறுப்பு வறட்சியை சந்திக்கிறார்களாம். பெரும்பாலான பெண்களுக்கு உறவு தொடங்கியதுமே அது எப்படி இருக்கும்.. நல்லாருக்குமா, மோசமா இருக்குமா.. திருப்தி கிடைக்குமா, கிடைக்காதா என்ற விவரம் தெரிந்து விடுமாம். சில பெண்களுக்கு சில விதமான பொசிஷனில் உறவில் ஈடுபடும்போது வித்தியாசமான சிந்தனைகள் வருகிறதாம். குறிப்பாக டாகி பொசிஷனில் உறவில் ஈடுபடும்போது பல பெண்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறதாம். பெரும்பாலான பெண்கள் உறவின்போது கத்த வேண்டும் போல நினைப்பார்களாம். குறிப்பாக துணையின் மூலம் கிடைக்கும் சந்தோஷம் அவர்களை உற்சாகத்தின் உச்சிக்குக் கொண்டு போகும்போது கத்தத் தோன்றுமாம். ஆனால் அதை வெளிப்படுத்துவது சிலர் மட்டும்தானாம். உறவின்போது துணையை உற்சாகப்படுத்தவும், அவர்களைத் தூண்டவும், அவர்களை வேகமாக இயங்கச் செய்யவும் 66 சதவீத பெண்கள் முணங்கி மூடை ஏற்றுகிறார்களாம். அதேசமயம், 87 சதவீதம் பெண்கள் தாங்கள் இப்படி முணகி, விரகதாபத்தை ஏற்றுவது, தங்களது துணைக்கு தன்னம்பிக்கை கொடுத்து உற்சாகப்படுத்தவே என்று தெரிவித்துள்ளனர். உறவின்போது பெண்கள் செய்யும் இன்னொரு காரியம் காற்றை வெளியேற்றுவது. ஆனால் இது வாயு பிரிதல் அல்ல. மாறாக பெண்ணுறுப்பில் உறவின்போது தேங்கிக் கொள்ளும் காற்று வெளியேறுவதாகும். பல பெண்களுக்கு உறவின்போது தலைவலி ஏற்படுவது வழக்கமாம். உறவு குறித்த சிந்தனை வந்தாலும் கூட பலருக்கு தலைவலி உணர்வு ஏற்படுமாம். ஆனால் இது வழக்கான தலைவலி இல்லையாம். உறவு குறித்த பதட்டம் அல்லது அந்த சிந்தனை கொடுக்கும் படபடப்பே இதற்குக் காரணமாம். இப்படி தலைவலி வந்தால் கூடவே அவர்களுக்கு ஆர்கஸமும் சேர்ந்து வருமாம். எனவே செக்ஸ் உறவு குறித்த சிந்தனை வரும்போது ஏற்படும் தலைவலியைப் பார்த்து பயப்படாமல் செக்ஸ் வைத்துக் கொள்ள முயற்சித்தால் தலைவலி தானாகவே போய் விடுமாம்.

No comments:

Post a Comment